Tuesday, March 21, 2023
Home இந்தியா இந்தியா முழுக்க 50% மாவட்டங்கள் கொரோனாவால் பாதிப்பு

இந்தியா முழுக்க 50% மாவட்டங்கள் கொரோனாவால் பாதிப்பு

டெல்லி

இந்தியாவில் 718 மாவட்டங்களில் 364 மாவட்டங்கள் நாடு முழுக்க கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50% மாவட்டங்கள் மொத்தமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தீவிரமாக பரவி உள்ளது. கடந்த ஒரே நாளில் மட்டும் 909 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க மொத்தம் 8356 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 3500 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருந்தது. இந்த நிலையில் தற்போது நாடு முழுக்க ஒரே வாரத்தில் 8356 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுக்க 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை நாடு முழுக்க 716 பேர் குணமாகி உள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் 74 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியா முழுக்க 1,86,906 பேருக்கு இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளது. சராசரியாக தினமும் நாடு முழுக்க 15,747 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. 584 பேருக்கு சராசரியாக தினமும் கொரோனா தொற்று ஏற்படுகிறது.

இந்தியா முழுக்க 40 கொரோனா தடுப்பு மருந்துகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் முழுமையாக இந்த மருந்துகள் உருவாக்கப்படவில்லை. இந்த மருந்துகள் தொடக்க நிலையில்தான் இருக்கிறது. இந்தியாவில் 718 மாவட்டங்களில் 364 மாவட்டங்கள் நாடு முழுக்க கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 50% மாவட்டங்கள் மொத்தமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 29 கணக்குப்படி வெறும் 160 மாவட்டங்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டது. ஏப்ரல் 6 கணக்குப்படி 284 மாவட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. தற்போது இதன் எண்ணிக்கை 364ஐ தொட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 50% மாவட்டங்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

அதிகமாக உத்தர பிரதேசத்தில் நிறைய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 40 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு 33 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 27 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தற்போது வரை 11 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments