Monday, December 4, 2023
Home இந்தியா இந்தியா முழுக்க 50% மாவட்டங்கள் கொரோனாவால் பாதிப்பு

இந்தியா முழுக்க 50% மாவட்டங்கள் கொரோனாவால் பாதிப்பு

டெல்லி

இந்தியாவில் 718 மாவட்டங்களில் 364 மாவட்டங்கள் நாடு முழுக்க கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50% மாவட்டங்கள் மொத்தமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தீவிரமாக பரவி உள்ளது. கடந்த ஒரே நாளில் மட்டும் 909 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க மொத்தம் 8356 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 3500 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருந்தது. இந்த நிலையில் தற்போது நாடு முழுக்க ஒரே வாரத்தில் 8356 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுக்க 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை நாடு முழுக்க 716 பேர் குணமாகி உள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் 74 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியா முழுக்க 1,86,906 பேருக்கு இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளது. சராசரியாக தினமும் நாடு முழுக்க 15,747 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. 584 பேருக்கு சராசரியாக தினமும் கொரோனா தொற்று ஏற்படுகிறது.

இந்தியா முழுக்க 40 கொரோனா தடுப்பு மருந்துகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் முழுமையாக இந்த மருந்துகள் உருவாக்கப்படவில்லை. இந்த மருந்துகள் தொடக்க நிலையில்தான் இருக்கிறது. இந்தியாவில் 718 மாவட்டங்களில் 364 மாவட்டங்கள் நாடு முழுக்க கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 50% மாவட்டங்கள் மொத்தமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 29 கணக்குப்படி வெறும் 160 மாவட்டங்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டது. ஏப்ரல் 6 கணக்குப்படி 284 மாவட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. தற்போது இதன் எண்ணிக்கை 364ஐ தொட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 50% மாவட்டங்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

அதிகமாக உத்தர பிரதேசத்தில் நிறைய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 40 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு 33 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 27 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தற்போது வரை 11 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

Recent Comments