Thursday, April 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்சென்னை, கோவை, மதுரை சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு

சென்னை, கோவை, மதுரை சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு

சென்னை

வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு. சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில் ஞாயிறு முதல் செவ்வாய்கிழமை வரை முழு ஊரடங்கு. 5 மாநகராட்சிகளை தவிர பிற இடங்களில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.

முழு ஊரடங்கு சமயத்தில் 5 மாநகராட்சிகளில் மிக மிக அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி. பெருநகரங்களில் நோய்த் தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல். கொரோனாவை தடுக்க 5 மாநகராட்சிகளில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் நடவடிக்கை. முழு ஊரடங்கு காலத்தில் 5 மாநகராட்சிகளில் அரசு, தனியார் நிறுவனங்கள் (அத்தியாவசிய தேவை தவிர) எதுவும் செயல்படாது. தலைமைச் செயலகம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை ஆகியவை தேவையான பணியாளர்களுடன் செயல்படும் .

முழு ஊரடங்கை மீறுபவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 5 மாநகராட்சிகளிலும் நடமாடும் காய்கறி வாகனங்கள் மட்டுமே அனுமதி, பிற காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு. கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின் படி செயல்படும். முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 5 மாநகராட்சிகள் தவிர மற்ற மாநகராட்சிகளில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும். முழு ஊரடங்கு காலத்தில் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments