Saturday, March 25, 2023
Home தமிழகம் ஊரடங்கை மீறி கறிவிருந்து - அரசு ஊழியர்கள் உட்பட 14 பேரை துரத்தும் புதுவை காவல்துறை

ஊரடங்கை மீறி கறிவிருந்து – அரசு ஊழியர்கள் உட்பட 14 பேரை துரத்தும் புதுவை காவல்துறை

கொரோனா அபாயத்தை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி அரசில் வனத்துறையில் ஒட்டுனராக பணிபுரியும் கல்யாணசுந்தரம் மற்றும் கால்நடை மருத்துவமனை உதவியாளர் கிருஷ்ணராஜ். மேற்கண்ட இருவரும் அயல்பணியில் (Deputation) புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை அமைச்சரின் உதவியாளராக பணியாற்றி வருகின்றனர்.

இவ்விரு அரசு ஊழியர்களும் 23.04.2020 அன்று மதியம் சுமார் 1.00மணியளவில் வில்லியனூர் காவல் எல்லைக்கு உட்பட்ட மணவெளி திருக்காஞ்சி சாலையில் அரசின் 144தடை உத்தரவை மதிக்காமல், தங்களுடன் 12 பேரை  ஒரே இடத்தில் கூட்டி சமூக இடைவெளியின்றி கறிவிருந்து சாப்பிட்டுள்ளனர்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து புதுச்சேரி காவல்துறையினர் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவான 14 பேரையும் தேடி வருகின்றனர்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments