Tuesday, October 3, 2023
Home இந்தியா மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு 344 ஆக அதிகரித்தது - பலியானவர்களின் எண்ணிக்கை 18

மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு 344 ஆக அதிகரித்தது – பலியானவர்களின் எண்ணிக்கை 18

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது.

மாநிலத்தில் மும்பை, தாராவி மற்றும் புனே போன்ற பகுதிகளில் பாதிப்பு அவ்வப்போது பதிவாகி கொண்டிருக்கிறது. தமிழர்கள் அதிகமான பகுதிகளில் தாராவியும் ஒன்று. மேலும் தாராவியில் குடிசை பகுதி வாழ் மக்கள் தான் பெரும்பாலானவர்கள் வசிக்கின்றனர். குடிசை பகுதிகளில் நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதால் அங்கு ஹைட்ரோ குளோரோகுயினை கொடுப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, தொற்று அதிகரித்து பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது. தாராவியில் கொரோனாவால் 330 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று (ஏப்.,29) புதிதாக தாராவியில் 14 பேர் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  344 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments