Wednesday, June 7, 2023
Home தமிழகம் தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா

சென்னை

இதுவரை இல்லாத அளவாக, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னையில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று புதிதாக 203 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 203 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் ஒட்டுமொத்தமாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1458 ஆக உயர்ந்துள்ளது. இன்று கடலூரில் 9 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 4 பேர், மதுரை, தென்காசி, அரியலூர், திருவள்ளூரில் தலா 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திருவண்ணாமலை, கன்னியாகுமரி, செங்கல்பட்டில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று 10584 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் 266 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 187, பெண்கள் 79 பேர் ஆவர். இதுவரை தமிழகத்தில் 2015 ஆண்களும். 1007 பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை 1,40,716 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 1,50,107 சாம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 38 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1379 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலையில் 1611 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிகம் பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் இன்றைய நிலையில் வீட்டுக்கண்காணிப்பில் 37 ஆயிரத்து 206 பேர் உள்ளார்கள். அரசின் தனிமைப்படுத்தும் முகாம்களில் 40 பேர் மருத்துவக்கண்காணிப்பில் உள்ளார்கள். கோவையில் இன்று 44 வயது ஆண் ஒருவர் கொரானாவால் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments