Wednesday, March 22, 2023
Home பொது கொரோனா செய்திகள் 07-05-2020

கொரோனா செய்திகள் 07-05-2020

தமிழகத்தில் இன்று புதிதாக 580 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5409 ஆக அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி; மாவட்டத்தின் மொத்த எண்ணிக்கை 8ஆக உயர்வு. சூளகிரியில் 2 மூதாட்டிகளுக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில் அவர்கள் மூலம் மேலும் 4 பேருக்கு தொற்று.

நெல்லையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 82 வயது முதியவர் உயிரிழந்தார். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலியானார். நெல்லையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 67 பேரில் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

 சென்னையில் 7 மண்டலங்களில் மட்டும் தான் பாதிப்பு அதிகம் உள்ளது – கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்.

துபாயில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கொச்சியில் இருந்து அனுப்பப்பட்ட ஏர் இந்தியா விமானம் துபாய் சென்று அடைந்தது. முதல் கட்டமாக அனுப்பப்படும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் விமானம் அங்கிருந்து கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு உள்நாட்டு விமான போக்குவரத்தை முதற்கட்டமாக 25% மட்டும் இயக்க விமான போக்குவரத்துதுறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல். விமானம் மற்றும் விமான நிலையங்களில் அதிகம் பேர் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அசாம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கேன்சர் நோயாளி குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தகவல்.

கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக 5,231 ரயில் பெட்டிகள் தயாராக உள்ளன -இந்திய ரயில்வே துறை

ஊரடங்கை உலக நாடுகள் அவசர கதியில் விலக்கிக் கொள்ள கூடாதென்றும், அப்படி விலக்கினால் கொரோனா பாதிப்பு உடனடியாக அதிகரித்து விடும் என்றும்  உலக சுகாதார அமைப்பு (W.H.O)எச்சரித்துள்ளது.

கொரோனா பரவலைத் கட்டுக்குள் வைப்பது இன்னும் சவாலாகவே உள்ளது – சீன அதிபர் ஜி ஜின்பிங்

ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகள் இயங்கும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 16,758 பேர் பாதிப்படைந்துள்ளனர். . இதையடுத்து குஜராத்தில் 6,629 பேரும் டெல்லியில் 5,532 பேரும் தமிழகத்தில் 4,829 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments