Friday, April 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாவிசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு - 3 கி.மீக்கு பரவிய வாயு.

விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு – 3 கி.மீக்கு பரவிய வாயு.

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர் வெங்கடபுரம் பகுதியில் அமைந்து இருக்கும் எல்.ஜி பாலிமர்ஸ் இந்தியா எனும் தெர்மாகோல் உற்பத்தி ஆலையானது  ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு இயங்கி உள்ளது. இந்நிலையில், அந்த ஆலையில் இருந்து அதிகாலையில் ரசாயன வாயுக் கசிவு நிகழ்ந்துள்ளது.

ஆலையில் இருந்து வெளியேறிய ரசாயன வாயு சம்பவத்தில் 6 வயது சிறுமி உள்பட 8 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகாலை 2.30 முதல் 3 மணி அளவில் ரசாயன வாயு கசிவு சம்பவம் நிகழ்ந்ததால் வாயுவை சுவாசித்த மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிகாலையில் வாயுக் கசிவு நிகழ்ந்ததால் மக்கள் அதை அறியாமலேயே இருந்துள்ளனர்.

மீட்புக் குழுவினர், போலீஸ் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியால் நூற்றுக்கணக்கான மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் கோபாலப்பட்டினம் மற்றும் கிங் ஜார்ஜ் (KGH) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெங்கடபுரம் பகுதியைச் சுற்றியுள்ள 128-க்கும் மேற்பட்டோர் கே.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 98 பேர் மீண்டுள்ளதாகவும், 10 பேரு மூச்சுத்திணறல் பிரச்சனையை சந்தித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்ட சம்பவம் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

ஒன்று முதல் ஒன்றரை கி.மீ சுற்றளவிற்கு அதிக பாதிப்பு நிகழ்ந்து உள்ளதாகவும், சுமார் 3 கி.மீ தூரம் வரை வாயுவின் துர்நாற்றம் வீசி வருவதாக கூறப்படுகிறது. கால்நடை விலங்குகள் கூட இருந்துள்ளதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக எல்.ஜி. பாலிமர்ஸ் ஆலையின் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments