Monday, September 25, 2023
Home உலகம் கொரோனாவை அடியோடு அழிக்க முடியாது, நம்மிடையே எப்போதும் தங்கிவிடக்கூடும் - உலக சுகாதார மையம்.

கொரோனாவை அடியோடு அழிக்க முடியாது, நம்மிடையே எப்போதும் தங்கிவிடக்கூடும் – உலக சுகாதார மையம்.

கொரோனாவை அடியோடு அழிக்க முடியாது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா, ஹெச்.ஐ.வி. வைரஸ் போல தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும். கொரோனா எப்போது அழியும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. கொரோனா நீண்டகாலம் பிரச்சனையை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்படுத்தாமலும் போகலாம். கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், வலிமையான ஒன்றை உறுதி செய்வது கடினமாக உள்ளது. அனைத்து நாடுகளுமே அதிகபட்ச கண்காணிப்பு நிலையை கடைபிடிப்பதுதான் சரியான வழிமுறை ஆகும்.

கொரோனா வைரஸ் ஒருபோதும் மறையாமல் நம்மிடையே எப்போதும் தங்கிவிடக்கூடும். கொரோனா வைரஸுடன் வாழ்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments