Friday, September 29, 2023
Home இந்தியா இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது

60 நாட்களுக்கு பின்னர் உள்நாட்டு பயணிகள் விமான சேவை இன்று ( மே 25) மீண்டும் துவங்கியது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு மாதமாக பயணியர் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல்கட்டமாக உள்நாட்டு விமான போக்குவரத்தை மட்டும் இன்று துவக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, லக்னோ, டில்லி , கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான சேவை துவங்கியது. பயணிகள் 2 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வந்தனர். மாஸ்க் அணிந்திருந்த அவர்கள், தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதற்காக பயணிகள், விமான நிலையம் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பெரும்பாலான பயணிகள் முகத்தை முழுவதும் மூடும் வகையிலான பிளாஸ்டிக் மாஸ்க்கையும் அணிந்திருந்தனர்.

சென்னையில் இருந்து இன்று காலை 6.35 மணிக்கு இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் டில்லி கிளம்பி சென்றது. 260 பேர் பயணிக்கக்கூடிய இந்த விமானத்தில் 111 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments