Monday, November 27, 2023
Home EMI ஒத்திவைப்பு காலத்தில் வட்டி வசூலிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

EMI ஒத்திவைப்பு காலத்தில் வட்டி வசூலிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

கடந்த மார்ச் 27 அன்று, ஆர்.பி.ஐ முதலில் மார்ச் முதல் மே வரையிலான கடன் EMI தவணைகளை ஒத்திவைக்க அனுமதி கொடுத்தது. அதன் பின் கடந்த மே 22 அன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் 3 மாதங்களுக்கு (ஜூன் – ஆகஸ்ட்) EMI தவணைகளை ஒத்திவைக்க அனுமதி கொடுத்தது.

EMI ஒத்திவைப்பு காலத்திலும், வட்டியை கணக்கிடும் பிரச்சனையை எதிர்த்து கஜேந்திர சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார். “ஒருபக்கம் மக்கள் நன்மைக்காக EMI ஒத்திவைத்து இருக்கிறார்கள். மறு பக்கம் ஒத்திவைக்கும் EMI-க்கு வட்டியும் போடுகிறார்கள். இந்த வட்டிச் சுமையையும் கடன் வாங்கியவர் தான் செலுத்த வேண்டும். இது ஒரு கையில் நன்மையை கொடுத்துவிட்டு, மறுகையால் அந்த நன்மையை பறிப்பது போல இருக்கிறது” என வழக்கு தொடுத்து இருக்கிறார்.

கொரோனா காலத்தில் பசி பட்டினியால் ஒரு தரப்பு மக்கள் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைத்து, எப்போது வழக்கமான வாழ்கையை வாழ முடியும் என ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள். மறு பக்கம், அலுவலகத்துக்குச் சென்று வேலை பார்க்கும் நடுத்தர மக்களுக்கு EMI என்கிற எமன், வட்டி என்கிற பாசக் கயிற்றை போட்டு இழுத்துக் கொண்டு இருக்கிறான். EMI-ல் இருந்து தப்பிக்க, ஆர்பிஐ 6 மாதம் EMI-களை ஒத்திவைக்க அனுமதி கொடுத்து இருக்கிறது. ஆனால் வட்டி வழக்கம் போலத் தொடரும் எனச் சொல்லி இருக்கிறார்கள். அது தான் கொடுமையிலும் கொடுமை என தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷன் பெஞ்ச் விசாரித்து, இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கும், மத்திய ரிசர்வ் வங்கிக்கும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்கச் சொல்லி நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

அரசுதான் மக்களை வேலை பார்க்க விடாமல் தடுத்தது. அதே அரசு, மக்கள் வாங்கிய கடன்களுக்கு, EMI ஒத்திவைப்பு காலத்திலும் வட்டியை செலுத்தச் சொல்கிறது. அரசும், ஆர்பிஐ அமைப்பும் ஏன் இயற்கை நீதி-ஐ மீறவில்லை என நினைக்கிறது என்பதை அறிந்து கொள்ள இந்த நீதிமன்றம் விரும்புவதாகச் சொல்லி இருக்கிறது.

 
 
- Advertisment -

Most Popular

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...

Recent Comments