Wednesday, March 29, 2023
Home Uncategorized புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் இருந்து பயணக் கட்டணம் வசூலிக்கக்கூடாது - உச்சநீதிமன்றம்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் இருந்து பயணக் கட்டணம் வசூலிக்கக்கூடாது – உச்சநீதிமன்றம்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பயணக்கட்டணத்தை அவர்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது எனவும் மாநில அரசுகளே பயணக்கட்டணத்தை ஏற்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்வதிலும், அவர்களுக்கு வாகன வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்த நீதிமன்றம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவும், குடிநீரும் வழங்குவதிலும் குறைபாடுகள் இருப்பதாக கவலை தெரிவித்தது.

புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து பயணக் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், பயண கட்டணத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும், நடந்து செல்லக்கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதை அடுத்து இந்த வழக்கு ஜூன் மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments