Wednesday, June 7, 2023
Home வர்த்தகம் ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.

ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.

ஏசர் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, தற்போது புதிய ஏசர் ஆஸ்பையர் 7 கேமிங் லேப்டாப் மாடலை சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக விலைக்கு தகுந்தபடி பல்வேறு புதிய தொழில் நுட்பங்களுடன் இது வெளிவந்துள்ளது.

புதிய ஏசர் ஆஸ்பையர் 7 கேமிங் லேப்டாப் மாடல் ஆனது 15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த  லேப்டாப் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

ஏசர் ஆஸ்பையர் 7 கேமிங் லேப்டாப் சாதனம் இன்டெல் 9-வது ஜெனரல் கோர் சிபியுக்களைக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் ஏஎம்டி பதிப்பில் ரைசன் 3000 தொடர் சிபி யுக்கள் பொருத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஏசர் லேப்டாப் மாடல் ஆனது பிரத்யேக என்விடியா ஜிடிஎக்ஸ் தொடர் கிராபிக்ஸ் அட்டையைக் கொண்டுள்ளது,மேலும் டிடிஆர் 4 ரேம் மற்றும் 1 டிபி வரை மெமரி என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த லேப்டாப்.

வைஃபை 6, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் ஏசரின் ட்ரூஹார்மனி ஆடியோ தொழில்நுட்பமும் ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் மாடலில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடலின் மென்பெருள் அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் மாடல் முழு எச்டி டிஸ்ப்ளே 81.61 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் மற்றும் சராசரியாக 2.15 கிலோ எடையுடன் வெளிவந்துள்ளது.

ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் மாடல் ரூ.54,990-விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க கிடைக்கும். விரைவில் ஏசர் இந்தியாவின் ஆன்லைன் ஸ்டோரிலும் ஏசர் ஆஸ்பையர் 7 கேமிங் லேப்டாப் மாடல் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments