Saturday, March 25, 2023
Home வர்த்தகம் 60% பயணிகளுடன் ஆம்னி பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை - உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

60% பயணிகளுடன் ஆம்னி பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை – உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

நாளைமுதல் தமிழகத்தில் பொதுப் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டாலும் ஆம்னி பேருந்துகளை இயக்கப் போவதில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

5-ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுப் பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களை 8 மண்டலங்களாக பிரித்து அதில் 7 வது மண்டலமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டும், 8 வது மண்டலமாக சென்னையையும் இணைத்துள்ளது.

இந்த இரண்டு மண்டலங்கள் தவிர மீதமுள்ள 32 மாவட்டங்கள் அடங்கியுள்ள 6 மண்டலங்களில் மண்டலங்களுக்குள் பொதுப்பேருந்து போக்குவரத்து 60 சதவீத பயணிகளுடன் இயக்கலாம் என அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் 60 % பயணிகளுடன் பேருந்தை இயக்குவது சாத்தியமில்லை என தெரிவித்துள்ளது.

நாளை ஆம்னி பேருந்துகள் இயங்காது என தெரிவித்துள்ல அவர்கள், இதுவரை ரூ. 600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காலத்திற்கும் சேர்த்து முன்னரே சாலை வரி செலுத்தியுள்ளதாகவும் அதுகுறித்து அரசுகள் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளனர். ஒரு பேருந்துக்கு ரூ 1 லட்சத்து 25,000 முதல் ரூ 3 லட்சம் வரை சாலை வரி மட்டும் முன் கூட்டியே கட்டப்பட்டுள்ளது. அது குறித்து பல முறை தெரிவித்தும் இதுவரை பதில் இல்லை என தெரிவித்துள்ளனர்.

2 மாதமாக நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க ஒரு பேருந்துக்கு ரூ.1 லட்சம் செலவாகும். ஆம்னி பேருந்துகள் சார்ந்த ஒரு லட்சம் தொழிலாளர்கள் கடந்த 2 மாதமாக வருமானமின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கான எந்த திட்டமும் அரசிடம் இல்லை. இவ்வாறு தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments