Tuesday, May 30, 2023
Home இந்தியா கேரளா - கர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து கொன்ற கொடூரம்

கேரளா – கர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து கொன்ற கொடூரம்

மலப்புரம்

கேரள மாநிலம் மலப்புரம் அருகே கர்ப்பிணி யானை ஒன்று கடந்த வாரம் புதனன்று வெள்ளியாற்றில் நின்ற நிலையில் இறந்து இருந்தது. அந்த யானையின் இறப்புக்கான காரணம் நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது. அதற்கான காரணத்தை மலப்புரம் மாவட்ட வன அதிகாரி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

காட்டு யானை ஒன்று உணவு தேடி கிராமத்திற்கு வந்துள்ளது. சாலையில் நடந்து சென்ற அதற்கு யாரோ வெடி பொருட்கள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை தந்துள்ளனர். எல்லோரையும் நம்பிய அவள், அதை வாங்கி உண்ட போது வெடித்தது. இதனால் அதன் வாய் மற்றும் நாக்கு படுகாயமடைந்தது. அப்போது அவள் தன்னைப் பற்றி யோசிக்காமல் பெற்றெடுக்கப் போகும் குட்டியை பற்றி நினைத்து அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

வலியுடன் கிராமத்தின் தெருக்களில் ஓடியபோதும் அவள் யாரையும் தாக்கவில்லை, ஒரு வீட்டையும் நசுக்கவில்லை. அவள் நன்மை நிறைந்தவள். அவளுக்கு தகுதியான பிரியாவிடை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, ஒரு லாரியில் ஏற்றி காட்டுக்குள் கொண்டு சென்றோம். அவள் விளையாடிய மற்றும் வளர்ந்த நிலத்தில் விறகுகளின் மீது கிடத்தினோம். பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் அவள் தனியாக இல்லை என்று கூறினார். எரியூட்டும் முன்பு அவள் முன் குனிந்து இறுதி மரியாதை செலுத்தினோம். இவ்வாறு பெரும் வலியுடன் கூடிய பதிவை எழுதியுள்ளார்.

வெடிபொருள் வாய் மற்றும் நாக்கில் ஏற்படுத்திய படுகாயத்தால் அந்த யானை உணவு உட்கொள்ள முடியாமல் சில நாட்கள் கழித்து உயிரிழந்துள்ளது. ஈக்கள் மற்றும் பூச்சிகளிலிருந்து தப்பிக்க அந்த கர்ப்பிணி யானை உயிர் பிரியும் முன் வலியுடன் ஆற்றில் நின்றிருக்கும் என வனத்துறையினர் கூறுகின்றனர்.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments