Saturday, November 25, 2023
Home இந்தியா கேரளா - கர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து கொன்ற கொடூரம்

கேரளா – கர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து கொன்ற கொடூரம்

மலப்புரம்

கேரள மாநிலம் மலப்புரம் அருகே கர்ப்பிணி யானை ஒன்று கடந்த வாரம் புதனன்று வெள்ளியாற்றில் நின்ற நிலையில் இறந்து இருந்தது. அந்த யானையின் இறப்புக்கான காரணம் நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது. அதற்கான காரணத்தை மலப்புரம் மாவட்ட வன அதிகாரி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

காட்டு யானை ஒன்று உணவு தேடி கிராமத்திற்கு வந்துள்ளது. சாலையில் நடந்து சென்ற அதற்கு யாரோ வெடி பொருட்கள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை தந்துள்ளனர். எல்லோரையும் நம்பிய அவள், அதை வாங்கி உண்ட போது வெடித்தது. இதனால் அதன் வாய் மற்றும் நாக்கு படுகாயமடைந்தது. அப்போது அவள் தன்னைப் பற்றி யோசிக்காமல் பெற்றெடுக்கப் போகும் குட்டியை பற்றி நினைத்து அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

வலியுடன் கிராமத்தின் தெருக்களில் ஓடியபோதும் அவள் யாரையும் தாக்கவில்லை, ஒரு வீட்டையும் நசுக்கவில்லை. அவள் நன்மை நிறைந்தவள். அவளுக்கு தகுதியான பிரியாவிடை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, ஒரு லாரியில் ஏற்றி காட்டுக்குள் கொண்டு சென்றோம். அவள் விளையாடிய மற்றும் வளர்ந்த நிலத்தில் விறகுகளின் மீது கிடத்தினோம். பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் அவள் தனியாக இல்லை என்று கூறினார். எரியூட்டும் முன்பு அவள் முன் குனிந்து இறுதி மரியாதை செலுத்தினோம். இவ்வாறு பெரும் வலியுடன் கூடிய பதிவை எழுதியுள்ளார்.

வெடிபொருள் வாய் மற்றும் நாக்கில் ஏற்படுத்திய படுகாயத்தால் அந்த யானை உணவு உட்கொள்ள முடியாமல் சில நாட்கள் கழித்து உயிரிழந்துள்ளது. ஈக்கள் மற்றும் பூச்சிகளிலிருந்து தப்பிக்க அந்த கர்ப்பிணி யானை உயிர் பிரியும் முன் வலியுடன் ஆற்றில் நின்றிருக்கும் என வனத்துறையினர் கூறுகின்றனர்.

- Advertisment -

Most Popular

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...

Recent Comments