Tuesday, October 3, 2023
Home இந்தியா பீகார் - ஜார்ஜ் பெர்னாண்டஸின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் நிதீஷ் குமார்

பீகார் – ஜார்ஜ் பெர்னாண்டஸின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் நிதீஷ் குமார்

பாட்னா

இந்தியாவின் தொழிற்சங்கத் தலைவர்களில் முதன்மையானவரும், முன்னாள் இராணுவ அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது முழு உருவச்சிலையை காணொலி மூலம் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் திறந்து வைத்தார்.

இந்த சிலை முசாபர்பூரில் உள்ள சிட்டி பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. எமெர்ஜென்சி காலகட்டத்தில் 1977-ல் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சிறையிலிருந்தே முசாபர்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முசாபர்பூர் தொகுதியில் மொத்தம் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார்.

பாட்னாவில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திலிருந்து காணொலி மூலம் ஜார்ஜ் பெர்னாண்டஸின் சிலையை நிதீஷ் குமார் திறந்து வைத்தார். சிலையின் மாதிரிக்கு நிதீஷ் குமார் மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் தீபக் குமார், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் சஞ்சல்குமார் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments