Saturday, March 25, 2023
Home இந்தியா பீகார் - ஜார்ஜ் பெர்னாண்டஸின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் நிதீஷ் குமார்

பீகார் – ஜார்ஜ் பெர்னாண்டஸின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் நிதீஷ் குமார்

பாட்னா

இந்தியாவின் தொழிற்சங்கத் தலைவர்களில் முதன்மையானவரும், முன்னாள் இராணுவ அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது முழு உருவச்சிலையை காணொலி மூலம் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் திறந்து வைத்தார்.

இந்த சிலை முசாபர்பூரில் உள்ள சிட்டி பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. எமெர்ஜென்சி காலகட்டத்தில் 1977-ல் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சிறையிலிருந்தே முசாபர்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முசாபர்பூர் தொகுதியில் மொத்தம் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார்.

பாட்னாவில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திலிருந்து காணொலி மூலம் ஜார்ஜ் பெர்னாண்டஸின் சிலையை நிதீஷ் குமார் திறந்து வைத்தார். சிலையின் மாதிரிக்கு நிதீஷ் குமார் மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் தீபக் குமார், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் சஞ்சல்குமார் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments