Wednesday, March 29, 2023
Home இந்தியா வட்டி தள்ளுபடி செய்ய முடிவெடுக்க வங்கிகளுக்கு ஜூன் 17ஆம் தேதிக்கு காலக்கெடு - உச்ச நீதிமன்றம்

வட்டி தள்ளுபடி செய்ய முடிவெடுக்க வங்கிகளுக்கு ஜூன் 17ஆம் தேதிக்கு காலக்கெடு – உச்ச நீதிமன்றம்

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மே 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தொழில்கள் முடங்கியதால் மக்கள் நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டனர். நெருக்கடியை சமாளிப்பதற்காக, மார்ச் முதல் செலுத்த வேண்டிய கடன் தவணைகளை செலுத்த மே 31ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.

பின்னர் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டதால் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கடன் தவணைகளை தாமதமாக செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டது. இது, கடனை தாமதமாக செலுத்த கூடுதல் கால அவகாசம் மட்டுமே தவிர கடன் தள்ளுபடியல்ல என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, கடன் தொகைக்கு வட்டித் தள்ளுபடி செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் ரிசர் வங்கி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், வட்டித் தள்ளுபடி செய்தால் வங்கிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், மக்களின் நலனை விட பொருளாதாரம் உயர்ந்தது அல்ல எனவும், கடனை செலுத்த அவகாசம் அளித்துவிட்டு வட்டி தள்ளுபடி செய்யவில்லை என்றால் ஆபத்து ஏற்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷான் கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூன்று மாதங்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியுமா என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அப்போது குறுக்கிட்ட எஸ்பிஐ தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “ஆறு மாத காலத்திற்கும் வட்டித் தள்ளுபடி செய்யக்கூடாது என அனைத்து வங்கிகளும் கருதுகின்றன” என தெரிவித்தார். இதுகுறித்து ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, இவ்விவகாரம் குறித்து ஆலோசிக்க 3 நாட்களுக்குள் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கும், நிதியமைச்சக அதிகாரிகளுக்கும் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யும்படி சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை நீதிபதி அசோக் பூஷன் கேட்டுக்கொண்டார். மேலும் அவர், “நாம் தற்போது சந்திப்பது சாதாரண சூழ்நிலையல்ல. இது ஒரு முக்கிய பிரச்சினை. ஒருபக்கம் கடனை தாமதமாக செலுத்த அவகாசம் அளித்துவிட்டு, மறுபக்கம் கடன்களுக்கு வட்டி வசூலிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 17ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 
 
 
 
- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments