Saturday, March 25, 2023
Home இந்தியா சீனா எல்லையில் கடும் மோதல் - இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 வீரர்கள் வீரமரணம்

சீனா எல்லையில் கடும் மோதல் – இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 வீரர்கள் வீரமரணம்

டெல்லி

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. பதற்றத்தைத் தணிக்க சம்பவ இடத்தில் இரு நாட்டின் ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என இந்திய ராணுவம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த மோதல் குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை.

எனினும் லடாக் எல்லையில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய பகுதிக்கு அத்துமீறி சீன ராணுவத்தினர் நேற்று இரவு நுழைந்தனர். அப்போது அவர்களை வெளியேற்றும் முயற்சியில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டனர். இதையடுத்து இந்திய வீரர்கள் மீது சீன ராணுவம் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இந்திய வீரர்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதில் சீனாவை சேர்ந்த 5 வீரர்கள் பலியாகிவிட்டதாக அந்த நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதே தவிர சீனாவில் எத்தனை வீரர்கள் பலியானார்கள் என்பது குறித்து இந்தியா உறுதிப்படுத்தவில்லை.

எல்லையில் பதற்றம் தணிந்து அமைதி நிலவுவதாக தெரிவித்த நிலையில் தற்போது மீண்டும் மோதல் ஏற்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளரிடம் சீன ராணுவத்தின் தாக்குதல் குறித்து கேட்ட போது ஒரு தலைபட்ச நடவடிக்கைகளையோ அல்லது சிக்கலை தூண்டிவிடுவதோ கூடாது என இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கூறுகையில் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை பேச்சுவார்த்தை மூலம் தணிக்க இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளது. அது போல் எல்லை பகுதிகளில் அமைதி நிலவவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் இந்திய ராணுவத்தினர் சாலை பணிகளை மேற்கொண்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. லடாக் எல்லையில் கடந்த மே மாதம் பாங்கோ லேக் பகுதியில் இரு தரப்பினரும் மோதி கொண்டனர். இதில் இரு தரப்பினரும் காயமடைந்தனர்.

இதையடுத்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனிடையே எல்லையில் சீனா போர் விமானங்கள், ஆயுதங்களுடன் ஏராளமான வீரர்களையும் குவித்தது. இதனால் சீனா பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்பதும், போர் புரிய ஆயத்தமாகி வருவதும் தெரியவந்தது.

இந்நிலையில் இந்த மாதம் 6-ஆம் தேதி சீன எல்லையில் இரு நாட்டின் லெப்டினன்ட் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு நாட்டு படைகளும் பின்வாங்கின என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று இரவு நடந்தது முதல் தாக்குதல் ஆகும்.

 
- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments