Friday, September 29, 2023
Home தமிழகம் சென்னையை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்

சென்னையை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்

ஜூன் 19-ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வரும் நிலையில், சென்னையிலிருந்து வெளியேறும் மக்களால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலுள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு பொதுமுடக்கம் வரும் ஜூன் 19-ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இதனால் சென்னையிலிருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய போலீசாருக்கு செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார்.
 
இதையடுத்து வண்டலுார், பரனுார், ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களையும் கடுமையாக சோதிக்கின்றனர். இ-பாஸ் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே பிற மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றது. மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதுதவிர உரிமம் இல்லாத, தலைக்கவசம், முகக்கவசம் இல்லாமல் வரும் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர். தற்போது வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
 
இதற்கிடையே சென்னையில் இருந்து செங்கல்பட்டு சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளன. இதனால் செங்கல்பட்டின் பரனூர் சுங்கச்சாவடியில் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் வரிசையாக காத்திருக்கின்றன. பெரும்பாலானோர் கணிசமான தொகையைக் கொடுத்து இருசக்கர வாகனத்திலும், ஆட்டோவிலும் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு சுங்கச்சாவடி வரை செல்கின்றனர். பலரும் போலீசார் சோதனையை கண்டதும் பாதி வழியிலேயே திரும்பி செல்கின்றனர். இன்று மட்டும் காலையில் இருந்து தற்போது வரை 50க்கும் மேற்பட்ட வாகனங்களை செங்கல்பட்டு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments