Thursday, December 7, 2023
Home தமிழகம் 1,000 சீன வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர் - வீர மரணம் அடைந்த பழனியின் சகோதரர்

1,000 சீன வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர் – வீர மரணம் அடைந்த பழனியின் சகோதரர்

திருவாடானை

”இரவில் இந்திய வீரர்கள் ஓய்வில் இருந்த போது, 1,000 சீன வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்,” என, ராணுவ வீரர் இதயக்கனி தெரிவித்தார்.

லடாக் கல்வான் எல்லையில், சீன ராணுவத்தின் திடீர் தாக்குதலில், ராமநாதபுரம் மாவட்டம், கடுக்கலுார் ராணுவ வீரர் பழனி, 40, உட்பட, 20 பேர் வீர மரணம் அடைந்தனர். நேற்று கடுக்கலுார் கிராம மக்கள், சோகத்துடன் காணப்பட்டனர்.பழனி சகோதரர் இதயக்கனி, (34), ராஜஸ்தான் மாநிலத்தில், ராணுவத்தில் பணியாற்றுகிறார். அவர் நேற்று காலை, 9 மணிக்கு கடுக்கலுார் வந்தார்.

இதயக்கனி கூறியதாவது:

நான், 2011ல் வேலைக்கு சேர்ந்தேன். அண்ணனுடன் அடிக்கடி அலைபேசியில் பேசுவேன். ஒரு மாதமாக தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் மரணம் குறித்து, மற்ற வீரர்களிடம் விசாரித்தேன். அவர்கள், ஜூன் 15 இரவு 9:30 மணிக்கு, 150 இந்திய வீரர்கள் ஓய்வில் இருந்தனர். அப்போது, 1,000 சீன வீரர்கள் திடீரென கற்களாலும், கம்பியாலும் தாக்கினர். இந்திய வீரர்களும் திருப்பி தாக்கினர். ஆறு இந்திய வீரர்கள், அருகிலிருந்த நதியில் விழுந்ததால், அவர்களின் நிலைமை தெரியவில்லை என்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

பழனியின் குடும்பத்தினருக்கு, கலெக்டர் வீரராகவ ராவ் ஆறுதல் கூறினார். அவர் கூறுகையில், ”வீர மரணம் அடைந்த பழனியை, அடக்கம் செய்யும் இடத்தில், நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என உறவினர்கள் தெரிவித்தனர். பரிசீலனை செய்யப்படும்,” என்றார்.

- Advertisment -

Most Popular

மிக்ஜம் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக...

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

Recent Comments