Monday, December 4, 2023
Home பொது கள்ளச்சந்தையில் விற்பவர்களுக்கு மொத்தமாக கொடுக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் - ஏமாற்றப்படும் மதுப் பிரியர்கள்

கள்ளச்சந்தையில் விற்பவர்களுக்கு மொத்தமாக கொடுக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் – ஏமாற்றப்படும் மதுப் பிரியர்கள்

சென்னை 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு பொதுமுடக்கம் வரும் ஜூன் 19-ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் திறக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் 30-ந் தேதி வரை மூடப்படும்.

இதனால் மதுவை கள்ள சந்தையில் விற்க டாஸ்மாக் ஊழியர்கள் உதவியுடன் கள்ளச்சந்தை வியாபாரிகள் பெருமளவில் மதுவை வாங்கி பதுக்கியுள்ளனர். பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் நேற்றும், இன்றும் கடை ஊழியர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் மொத்தமாக விநியோகம் செய்து விட்டு, சில்லறை விநியோகம் செய்யாமல், வரிசையில் நின்ற மது பிரியர்களை பலமணி நேரம் காக்கவைத்து, பின்னர் சரக்கு காலியாகிவிட்டது என்று திருப்பி அனுப்பியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பக்கம், சுடுகாட்டு சாலையில் உள்ள கடையில் மாலை வரை வரிசையில் நின்று சரக்கு கிடைக்காமல் ஏமாந்து திரும்பிய மதுபிரியர் ஒருவர் கூறுகையில், “இந்த பகுதியில் ஒரே ஒரு கடை உள்ளது. இங்கு வரிசையில் நிற்பவர்களுக்கு ஒரு பாட்டில் கூட வழங்கப்படவில்லை. டாஸ்மாக் ஊழியர்கள் அவர்களது நண்பர்களை அலைபேசியில் அழைத்து பெட்டி பெட்டியாக கொடுத்தனுப்பினார்கள். பின்னர் பல மணிநேரம் கால்கடுக்க வரிசையில் நின்ற எங்களுக்கு சரக்கு தீர்ந்து விட்டது என்று கூறி கடையை மூடிவிட்டனர். இந்த கடைக்கு சப்ளை செய்யப்பட்ட முழு சரக்கும் கள்ளச்சந்தை விற்பனைக்கு சென்று விட்டது. இதற்கு காவலுக்கு நின்ற போலீசாரும் உடந்தை என்றார்”.

தாமிரபக்கம் பகுதியில், கள்ளச்சந்தையில் பலமடங்கு அதிகமான விலையில் பாட்டில் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. கள்ளச்சந்தை வியாபாரிகளை மடக்கிப்பிடித்து அரசு நடவடிக்கை எடுக்குமா?

- Advertisment -

Most Popular

மிக்ஜம் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக...

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

Recent Comments