Wednesday, March 22, 2023
Home பொது கள்ளச்சந்தையில் விற்பவர்களுக்கு மொத்தமாக கொடுக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் - ஏமாற்றப்படும் மதுப் பிரியர்கள்

கள்ளச்சந்தையில் விற்பவர்களுக்கு மொத்தமாக கொடுக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் – ஏமாற்றப்படும் மதுப் பிரியர்கள்

சென்னை 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு பொதுமுடக்கம் வரும் ஜூன் 19-ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் திறக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் 30-ந் தேதி வரை மூடப்படும்.

இதனால் மதுவை கள்ள சந்தையில் விற்க டாஸ்மாக் ஊழியர்கள் உதவியுடன் கள்ளச்சந்தை வியாபாரிகள் பெருமளவில் மதுவை வாங்கி பதுக்கியுள்ளனர். பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் நேற்றும், இன்றும் கடை ஊழியர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் மொத்தமாக விநியோகம் செய்து விட்டு, சில்லறை விநியோகம் செய்யாமல், வரிசையில் நின்ற மது பிரியர்களை பலமணி நேரம் காக்கவைத்து, பின்னர் சரக்கு காலியாகிவிட்டது என்று திருப்பி அனுப்பியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பக்கம், சுடுகாட்டு சாலையில் உள்ள கடையில் மாலை வரை வரிசையில் நின்று சரக்கு கிடைக்காமல் ஏமாந்து திரும்பிய மதுபிரியர் ஒருவர் கூறுகையில், “இந்த பகுதியில் ஒரே ஒரு கடை உள்ளது. இங்கு வரிசையில் நிற்பவர்களுக்கு ஒரு பாட்டில் கூட வழங்கப்படவில்லை. டாஸ்மாக் ஊழியர்கள் அவர்களது நண்பர்களை அலைபேசியில் அழைத்து பெட்டி பெட்டியாக கொடுத்தனுப்பினார்கள். பின்னர் பல மணிநேரம் கால்கடுக்க வரிசையில் நின்ற எங்களுக்கு சரக்கு தீர்ந்து விட்டது என்று கூறி கடையை மூடிவிட்டனர். இந்த கடைக்கு சப்ளை செய்யப்பட்ட முழு சரக்கும் கள்ளச்சந்தை விற்பனைக்கு சென்று விட்டது. இதற்கு காவலுக்கு நின்ற போலீசாரும் உடந்தை என்றார்”.

தாமிரபக்கம் பகுதியில், கள்ளச்சந்தையில் பலமடங்கு அதிகமான விலையில் பாட்டில் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. கள்ளச்சந்தை வியாபாரிகளை மடக்கிப்பிடித்து அரசு நடவடிக்கை எடுக்குமா?

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments