Tuesday, March 21, 2023
Home இந்தியா கொரோனா தாக்கிய டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல்நிலை பின்னடைவு

கொரோனா தாக்கிய டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல்நிலை பின்னடைவு

டெல்லி

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அவருக்கு தற்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் சத்யேந்திர ஜெயினை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி அங்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கடந்த புதன்கிழமை அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு ராஜீவ் காந்தி சூப்பர் மல்டி ஸ்பெஸாலிட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு நுரையிரல் பாதிப்புடன் கடுமையான நிமோனியாவும் பாதித்துள்ளது. இதனால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்தது. இதையடுத்து அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் ஜெயின் உடல் நிலை தொடர்ந்து மோசடைந்து வருகிறது. இதையடுத்து அமைச்சர் சத்யேந்திர ஜெயின் டெல்லியில் உள்ள மேக்ஸ் என்ற தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார். அங்கு அவருக்கு பிளாஸ்மாக சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments