Tuesday, May 30, 2023
Home இந்தியா சீனாவின் கஸ்டடியில் வீரர்கள் - இந்திய ராணுவம் மறைத்தது ஏன்?

சீனாவின் கஸ்டடியில் வீரர்கள் – இந்திய ராணுவம் மறைத்தது ஏன்?

இந்தியா – சீனா எல்லை பிரச்சினை கடந்த சில வாரங்களாக பூதாகரமாகியுள்ளது. இது தொடர்பாக கடந்த 6ஆம் தேதி இந்தியா- சீனா இடையேயான ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதால் எல்லையில் இருந்து சீன படைகள் படிப்படியாக திரும்ப பெறப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ஆம் தேதி இரவு இரு நாட்டு ராணுவ வீரர்களும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின் போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது நடைபெற்ற துப்பாக்கி சண்டையின் போது, இந்திய ராணுவ தரப்பில் ஒரு அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு மொத்தம் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக ராணுவத்தின் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ராணுவ வீரர்கள் 76 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களின் நிலைமை தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – சீனா இடையேயான தாக்குதல் குறித்து கடந்த வியாழக்கிழமை ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், எந்த ஒரு இந்திய வீரரும் மாயமாகவில்லை என உறுதி படுத்தப்பட்டிருந்தது. அதன் பொருள் என்னவென்றால், மோதல்களில் ஈடுபட்ட அனைத்து வீரர்களும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளனர் என்பதாகும். அத்துடன், சீனாவின் பிடியில் இந்திய வீரர்கள் சிக்கியுள்ளதாக அதில் எந்த தகவலும் இடம் பெறவில்லை.

அதேசமயம், சம்பவ இடத்தில் இரு நாட்டின் ராணுவ அதிகாரிகளும் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சீனாவின் பிடியில் இருந்த 4 அதிகாரிகள் உள்பட 10 இந்திய ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தாயகம் திரும்பியுள்ளனர். வழக்கமான நடைமுறையின்படி, அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்கள் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வியாழன்கிழமை வரை மூன்று கட்டங்களாக மேஜர் ஜெனெரல் மட்டத்திலான பரபரப்பான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, இந்திய வீரர்கள் மாயமானது குறித்து ராணுவம் தெரிவிக்காதது ஏன் என்றும், எல்லையில் அர்ப்பணிப்புடன் செயல்படும் வீரர்களின் நிலைமையில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படாதது தொடர்பாகவும் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments