Thursday, December 7, 2023
Home இந்தியா 10 ராணுவ வீரர்களை விடுவித்தது சீனா - காணாமல் போனவர்கள் நாடு திரும்பினர்

10 ராணுவ வீரர்களை விடுவித்தது சீனா – காணாமல் போனவர்கள் நாடு திரும்பினர்

இந்தியா-சீனா இடையே சில தினங்களுக்கு முன் நடந்த சண்டையைத் தொடர்ந்து அதிகாரிகள் உள்பட 10 ராணுவ வீரர்களைக் காணவில்லை என இந்தியா அறிவித்திருந்தது. இந்த சூழலில் அவர்கள் சீன ராணுவத்தால் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் 3 தினங்களுக்கு முன் இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே சண்டை வெடித்தது. இந்த சண்டையில் இதுவரை இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சண்டையின்போது சீனாவுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையே இந்தியா தரப்பில் 4 ராணுவ அதிகாரிகள் உள்பட 10 ராணுவ வீரர்களைக் காணவில்லை என இந்திய ராணுவம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

சீனாவிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக, காணாமல் போனவர்களைச் சீனா அடைத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ராணுவ வீரர்களை விடுவிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட தொடர் பேச்சுவார்த்தை காரணமாக 10 ராணுவ வீரர்களும் வியாழக் கிழமை மாலை 5 மணிக்கு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சீனா வசம் சிக்கியிருந்த ராணுவ வீரர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அனைவரும் நலமுடன் உள்ளனர். இந்நிலையில் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராணுவ அதிகாரிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்” எனக் கூறியுள்ளது.

- Advertisment -

Most Popular

மிக்ஜம் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக...

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

Recent Comments