Tuesday, May 30, 2023
Home இந்தியா 10 ராணுவ வீரர்களை விடுவித்தது சீனா - காணாமல் போனவர்கள் நாடு திரும்பினர்

10 ராணுவ வீரர்களை விடுவித்தது சீனா – காணாமல் போனவர்கள் நாடு திரும்பினர்

இந்தியா-சீனா இடையே சில தினங்களுக்கு முன் நடந்த சண்டையைத் தொடர்ந்து அதிகாரிகள் உள்பட 10 ராணுவ வீரர்களைக் காணவில்லை என இந்தியா அறிவித்திருந்தது. இந்த சூழலில் அவர்கள் சீன ராணுவத்தால் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் 3 தினங்களுக்கு முன் இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே சண்டை வெடித்தது. இந்த சண்டையில் இதுவரை இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சண்டையின்போது சீனாவுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையே இந்தியா தரப்பில் 4 ராணுவ அதிகாரிகள் உள்பட 10 ராணுவ வீரர்களைக் காணவில்லை என இந்திய ராணுவம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

சீனாவிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக, காணாமல் போனவர்களைச் சீனா அடைத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ராணுவ வீரர்களை விடுவிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட தொடர் பேச்சுவார்த்தை காரணமாக 10 ராணுவ வீரர்களும் வியாழக் கிழமை மாலை 5 மணிக்கு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சீனா வசம் சிக்கியிருந்த ராணுவ வீரர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அனைவரும் நலமுடன் உள்ளனர். இந்நிலையில் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராணுவ அதிகாரிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்” எனக் கூறியுள்ளது.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments