Tuesday, October 3, 2023
Home பொது பனை மரத்து உச்சியில் உயிருக்கு போராடி உயிரிழந்த பனை மர தொழிலாளி

பனை மரத்து உச்சியில் உயிருக்கு போராடி உயிரிழந்த பனை மர தொழிலாளி

தூத்துக்குடி

பனை மரத்து உச்சியில் ஒரு மணி நேரம் உயிருக்கு போராடி இருக்கிறார் நடேசன்.. அவரை காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தும் கடைசியில் அநத் பனை மர தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்துள்ள பகுதி விஜயநாராயணபுரம்.. இங்கு வசித்து வந்தவர் நடேசன், வயது 63. இவர் ஒரு பனை மர தொழிலாளி. கிருஷ்ணகுமார் என்பவரது தோட்டத்தில் நடேசன் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், பதனீர் இறக்க போகிறேன் என்று வீட்டில சொல்லிவிட்டு கிளம்பி போயுள்ளார் நடேசன். ஆனால் ரொம்ப நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. அதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி கணவரை தேடி தோட்டத்துக்கு போனார். அப்போது பனை மரத்தின் உச்சியில் நடேசன் தொங்கி கொண்டிருந்தார். பனை மட்டைகளுக்கு இடையே அரை மயக்கத்தில் கிடநத்தை கண்டு அலறினார் மனைவி, சத்தம் கேட்டு அங்கிருந்தோர் ஓடி வந்தனர். அதில் சக பனை தொழிலாளி ஒருவர் மரம் ஏற முயன்றார், ஆனால் அவரால் முடியவில்லை.

அதனால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்டது. அவர்களும் விரைந்து வந்தனர். ஆனால், அந்த பனை மரம் ஏற அவர்களிடம் அடுக்கு ஏணி வசதி இல்லை. அவர்களில் யாருக்கு.ம் பனை மரம் ஏறும் அளவுக்கு பயிற்சியும் இல்லை. அதனால் ஏணிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, பிறகு கயிறு கட்டிக் கொண்டு தீயணைப்பு வீரர்கள்மேலே ஏறினர் . இதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.

மயங்கி கிடந்த நடேசனை மீட்டு அதற்குள் ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. ஆனல் எவ்வளவோ முயற்சித்தும் நடேசனை காப்பாற்ற முடியவில்லை. கடைசி வரை நினைவு திரும்பாமயே நடேசன் உயிர் பிரிந்துவிட்டது. நடேசனுக்கு என்ன ஆனது? எதனால் பனைமட்டைகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்டார் என தெரியவில்லை. பல வருடமாக பனை மரம் ஏறும் பழக்கப்பட்ட தொழிலாளிக்கு மரம் ஏறுவதில் பிரச்சனை இருந்திருக்காது என்றே தெரிகிறது.

ஆனாலும் ஒரு மணி நேரம் கஷ்டப்பட்டும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அதேசமயம், தீயணைப்பு வீரர்களிடம் உயரமான அடுக்குகளை கொண்ட ஏணிகள் கையிருப்பில் இல்லாதது அதிர்ச்சியை தருகிறது. நகர்ப்புறங்களில் இல்லாவிட்டாலும், தென்மாவட்ட தோட்ட தொழிலாளர்கள் உள்ள பகுதிகளில் இந்த “ஸ்கைலிப்ட்” எனப்படும் ஏணிகளை அவசரத்துக்கு கையில் வைத்திருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments