Wednesday, June 7, 2023
Home தமிழகம் தமிழகத்தில் இன்று (22-06-2020) ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தமிழக...

தமிழகத்தில் இன்று (22-06-2020) ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 62,087 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1,487 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 42,752 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 126 பேருக்கும், திருவள்ளூரில் 120 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 56 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தவிர அதிகபட்சமாக மதுரையில் 157 பேருக்கும், திருவண்ணாமலையில் 139 பேருக்கும், கடலூரில் 63 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 37 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 794 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று 1,358 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து விடு திரும்பியுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 34,112 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 27,178 பேருக்கு தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments