Sunday, June 4, 2023
Home இந்தியா தாராவியில் கொரோனாவை கட்டுப்படுத்திய மகாராஷ்டிரா அரசு - கடைபிடிக்குமா தமிழகம்?

தாராவியில் கொரோனாவை கட்டுப்படுத்திய மகாராஷ்டிரா அரசு – கடைபிடிக்குமா தமிழகம்?

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் ஏப்ரல் மாத தொடக்கத்தில், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால் வேகமான பரவத் தொடங்கியது. 10’க்கு 10′ என்கிற அறைக்குள் 5 முதல் 7 பேர் வரை வசிக்கும் நெருக்கடியான குடியிருப்பில், மிகப்பெரிய பேராயம் ஏற்படும் என உணர்ந்த மும்பை மாநகராட்சி, தாராவியை வெளி உலகில் இருந்து தனிமைப்படுத்தியது. தொற்று வேகம் 12 சதவீதமாக அதிகரித்த நிலையில், அனைவரையும் வீடுகளில் முடக்கியதுடன், ஒவ்வொரு வீடாக சோதனையும், நான்கு முதல் 5 அடுக்கு தொடர்புகளும் பரிசோதனைக்கு கொண்டுவரப்பட்டன.

மொத்தம் 8 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்டதுடன், 350 தனியார் மருத்துவமனைகள், பயிற்சி மையங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இப்படியான தீவிர நடவடிக்கைகளால் மே மாதத்தில் 4.3 சதவிதமாக குறைந்த தொற்று தற்போது 1 சதவீதம் என்கிற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் 43 பேர் மட்டுமெ பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜூன் மூன்றாவது வாரத்தில் 19 பேராக குறைந்துள்ளது. வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலையில், இந்தியாவுக்கே தாராவி முன்னுதாரணமாகி உள்ளது.

மகாராஷ்டிராவுக்கும், மும்பை மாநகராட்சிக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments