Monday, December 4, 2023
Home இந்தியா தாராவியில் கொரோனாவை கட்டுப்படுத்திய மகாராஷ்டிரா அரசு - கடைபிடிக்குமா தமிழகம்?

தாராவியில் கொரோனாவை கட்டுப்படுத்திய மகாராஷ்டிரா அரசு – கடைபிடிக்குமா தமிழகம்?

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் ஏப்ரல் மாத தொடக்கத்தில், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால் வேகமான பரவத் தொடங்கியது. 10’க்கு 10′ என்கிற அறைக்குள் 5 முதல் 7 பேர் வரை வசிக்கும் நெருக்கடியான குடியிருப்பில், மிகப்பெரிய பேராயம் ஏற்படும் என உணர்ந்த மும்பை மாநகராட்சி, தாராவியை வெளி உலகில் இருந்து தனிமைப்படுத்தியது. தொற்று வேகம் 12 சதவீதமாக அதிகரித்த நிலையில், அனைவரையும் வீடுகளில் முடக்கியதுடன், ஒவ்வொரு வீடாக சோதனையும், நான்கு முதல் 5 அடுக்கு தொடர்புகளும் பரிசோதனைக்கு கொண்டுவரப்பட்டன.

மொத்தம் 8 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்டதுடன், 350 தனியார் மருத்துவமனைகள், பயிற்சி மையங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இப்படியான தீவிர நடவடிக்கைகளால் மே மாதத்தில் 4.3 சதவிதமாக குறைந்த தொற்று தற்போது 1 சதவீதம் என்கிற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் 43 பேர் மட்டுமெ பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜூன் மூன்றாவது வாரத்தில் 19 பேராக குறைந்துள்ளது. வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலையில், இந்தியாவுக்கே தாராவி முன்னுதாரணமாகி உள்ளது.

மகாராஷ்டிராவுக்கும், மும்பை மாநகராட்சிக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisment -

Most Popular

மிக்ஜம் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக...

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

Recent Comments