Saturday, March 25, 2023
Home பொது சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறி திருமணம் நடத்திய பூசாரி கைது

சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறி திருமணம் நடத்திய பூசாரி கைது

சென்னை பட்டாளத்தில் ஊரடங்கு விதிகளை மீறி நூற்றுக்கணக்கான உறவினர்களுடன் கோலாகலமாக திருமணம் நடத்தி வைத்த பூசாரியை கைது செய்த போலீசார், மணமக்களின் குடும்பத்திற்கு ரூபாய் 20 ஆயிரம் அபராதமும் விதித்தனர். கொரோனா பரவும் சூழலில் நூற்றுக்கணக்கான உறவினர்கள் கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்திருப்பது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் தற்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது எனவும், அத்தியாவசிய பொருட்களை வாங்கும் பொருட்டு அருகிலுள்ள கடைகளுக்கு நடந்தே செல்ல வேண்டும் என பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு முன்னரே அனுமதி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக 10 நபர்களுக்கு மிகாமல் திருமணம் நடத்த மாநகராட்சி சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை பட்டாளம் பகுதியில் சுமார் 200 நபர்கள் ஒன்றுகூடி கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கோவில் பூசாரி திருமணத்தை நடத்தி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து,பூசாரியை கைது செய்த போலீசார், ஊரடங்கு உத்தரவை மீறி திருமணம் நடத்திய குற்றத்திற்காக உறவினர்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து, திருமண நிகழ்வில் கலந்துகொண்ட உறவினர்கள் உட்பட அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுத்தியுள்ளனர்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments