Tuesday, October 3, 2023
Home பொது சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறி திருமணம் நடத்திய பூசாரி கைது

சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறி திருமணம் நடத்திய பூசாரி கைது

சென்னை பட்டாளத்தில் ஊரடங்கு விதிகளை மீறி நூற்றுக்கணக்கான உறவினர்களுடன் கோலாகலமாக திருமணம் நடத்தி வைத்த பூசாரியை கைது செய்த போலீசார், மணமக்களின் குடும்பத்திற்கு ரூபாய் 20 ஆயிரம் அபராதமும் விதித்தனர். கொரோனா பரவும் சூழலில் நூற்றுக்கணக்கான உறவினர்கள் கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்திருப்பது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் தற்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது எனவும், அத்தியாவசிய பொருட்களை வாங்கும் பொருட்டு அருகிலுள்ள கடைகளுக்கு நடந்தே செல்ல வேண்டும் என பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு முன்னரே அனுமதி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக 10 நபர்களுக்கு மிகாமல் திருமணம் நடத்த மாநகராட்சி சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை பட்டாளம் பகுதியில் சுமார் 200 நபர்கள் ஒன்றுகூடி கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கோவில் பூசாரி திருமணத்தை நடத்தி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து,பூசாரியை கைது செய்த போலீசார், ஊரடங்கு உத்தரவை மீறி திருமணம் நடத்திய குற்றத்திற்காக உறவினர்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து, திருமண நிகழ்வில் கலந்துகொண்ட உறவினர்கள் உட்பட அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுத்தியுள்ளனர்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments