டெல்லி
கொரோனாவிடம் சரணடைந்துவிட்டார் பிரதமர் மோடி என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பேரழிவை எதிர்த்து போராட மறுக்கிறார். நாட்டின் புதிய பகுதிகளிலும் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.