Monday, October 2, 2023
Home இந்தியா கொரோனா: சமூகப் பரவலை நெருங்கிவிட்டோம் - கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா

கொரோனா: சமூகப் பரவலை நெருங்கிவிட்டோம் – கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா

திருவனந்தபுரம்

இந்தியாவிலேயே முதல்முறையாக, “கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை மிகவும் நெருங்கிவிட்டது” என, கேரள அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளதாவது:

கேரளாவில் கொரோனா வைரசின் சமூகப் பரவல் ஏற்கனவே தொடங்கிவிட்டதா என, நம்மால் சொல்ல முடியாது. ஆனால், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பு இல்லாதவர்கள் மற்றும் பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கும் தற்போது அதிகளவில் தொற்று ஏற்படுகிறது. தினமும் 200 பேருக்கு பாதிப்பு உறுதியாகி வருகிறது. இதனால் நாம் சமூகப் பரவல் என்னும் நிலையை நெருங்கிவிட்டோம்.

நாடு முழுவதும் அமலில் இருந்த முழு பொது முடக்கம் முடிவுக்கு வந்தவுடன், வெளிநாடுகளில் இருந்து 4.1 லட்சம் கேரள மக்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இதேபோல், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோரும் கேரளாவிற்கு திரும்பியுள்ளனர். இவர்களில் இதுவரை ஐந்தாயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் உள்ளூர் பரவலையும், இறப்பு விகிதத்தையும் கேரளா குறைத்துள்ளது. ஆனால், தமிழகம் மற்றும் கர்நாடகாவிலும் இதே நிலை எட்டப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். இல்லையெனில் அங்கிருந்து நிறைய மக்கள் கேரளாவிற்கு வந்தால் புதிய சிக்கல்கள் உருவாக கூடும்.

மேலும், கேரளாவை பொறுத்தவரை, கொரோனா நோயாளிகளில், 30– 50 சதவீதத்தினருக்கு எவ்வித அறிகுறியும் காணப்படுவதில்லை. இது மிகவும் சிக்கலான சூழலை உருவாக்கியுள்ளது என, இந்திய மருத்துவ கழகத்தின் கேரள மாநில பிரிவின் துணைத் தலைவரான மருத்துவர் சுல்பியும் எச்சரித்துள்ளார். இதனால், கொரோனா வைரஸ் பரவல் வரும் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் முடிவுக்கு வரும் என்று நம்மால் உறுதிபட கூற முடியாது. இதனால், அவசர சட்டத்தை அடுத்தாண்டு ஜூலை மாதம் வரை நீட்டித்துள்ளோம்.

கேரளா ஒவ்வொரு முறையும் தேவைக்கு அதிகமாகவே பிரச்சனையின் வீரியத்தை எடுத்துக்கொள்கிறது. அப்போது தான் கொரோனா போன்ற கொடிய தொற்றை எதிர்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments