Wednesday, March 22, 2023
Home உலகம் 87 ஜப்பானிய நிறுவனங்களை சீனாவை விட்டு வெளியேற ஜப்பான் அரசு உத்தரவு,

87 ஜப்பானிய நிறுவனங்களை சீனாவை விட்டு வெளியேற ஜப்பான் அரசு உத்தரவு,

சீனாவில் இருந்து இயங்கும் 87 ஜப்பானிய நிறுவனங்களை சீனாவை விட்டு வெளியேறுமாறு ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக அந்நிறுவனங்களுக்கு பொருளாதார உதவியாக சுமார் 653மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை ஜப்பான் அரசு கொடுக்க உள்ளது, ஆனால் இந்த நிதிக்காக ஜப்பான் அரசு சுமார் 2.2பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிதி உதவியை ஏற்கனவே பல நிறுவனங்கள் பெற்றுள்ள நிலையில் வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளன. அதிகபட்சமாக தென் கிழக்கு ஆசிய நாடுகளில்தான் புதிதாக தொழில் தொடங்கி உள்ளன.

இதன்படி ஹோயா எனும் கணிணி ஹார்ட் டிஸ்க் தயாரிப்பு நிறுவனம் வியட்நாம் மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளை தேர்வு செய்துள்ளது, சுமிட்டோமோ ரப்பர் தொழிற்சாலை மலேசியாவிலும், ஷின் எட்ஸூ வேதியியல் நிறுவனம் வியட்னாமிற்கும் இடம் பெயர்ந்துள்ளன.

ஜப்பான் அரசின் இந்த நடவடிக்கை சீனாவின் பொருளாதாரத்தை சேதப்படுத்த முயலும் நடவடிக்கை ஆகவே பார்க்கப்படுகிறது.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments