Friday, May 26, 2023
Home உலகம் பொலிவியாவில் அதிர்ச்சி - கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்ட சடலங்கள் சாலைகளில் மீட்பு

பொலிவியாவில் அதிர்ச்சி – கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்ட சடலங்கள் சாலைகளில் மீட்பு

பொலிவியாவில் கடந்த 5 நாள்களில் சாலைகள் மற்றும் தெருக்களில் 400 க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த ஜூலை 15 முதல் 20 வரை நாட்டின் சில பெரிய நகரங்களின் வீதிகள், வாகனங்கள் மற்றும் வீடுகளில் 400 க்கும் மேற்பட்ட இறந்த உடல்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதில், 85 சதவிகிதம் பேர் கொரோனா வைரஸால் இறந்ததாக நம்பப்படுகிறது.

கோச்சபம்பா பெருநகரப் பகுதியில் மொத்தம் 191 சடலங்களும், நிர்வாகத் தலைநகர் லா பாஸில் 141 சடலங்களும், மிகப்பெரிய நகரமான சாண்டா குரூஸில் 68 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் 85 சதவிகிதம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய காவல்துறை இயக்குனர் இவான் ரோஜாஸ் தெரிவித்தார்.

அந்நாட்டின் கோச்சபம்பா மற்றும் லா பாஸ் நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலவரப்படி, பொலிவியாவில் இதுவரை 64,135 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,328 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 19,721 பேர் குணமடைந்துள்ளனர்.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments