Thursday, December 7, 2023
Home இந்தியா ராஜஸ்தானில் 35 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் - 11 போலீசாருக்கு ஆயுள் தண்டனை

ராஜஸ்தானில் 35 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் – 11 போலீசாருக்கு ஆயுள் தண்டனை

ராஜஸ்தானில் 35 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் வழக்கில் டி.எஸ்.பி உட்பட 11 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பரத்பூர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ராஜாமான் சிங், ராஜஸ்தான் மாநிலம் சுயேச்சை எம்எல்ஏ-வாக இருந்தவர். 1985ம் ஆண்டு தேர்தலின் போது தமது ஜீப்பில் சென்று அப்போதைய முதலமைச்சர் சிவசரன் மாத்தூரின் பிரச்சார மேடை மீது மோதினார். இதில் ஹெலிகாப்டர் ஒன்றும் சேதம் அடைந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக மறுநாளே ராஜா மான் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இருவர் டீக் தொகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சரண் அடைய சென்றனர். அப்போது காவல் நிலையத்தில் இருந்த காவல் துணை கண்காணிப்பாளர் கான்சிங் பாடி மற்றும் போலீசார் என்கவுண்டர் நடத்தி ராஜா மான் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இருவரை கொன்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் 11 போலீசார் உள்ளிட்ட 19 பேரின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதில் 3 பேர் வழக்கு நடந்து கொண்டிருந்த போது காலமாயினர், மற்ற 5 பேர் விடுவிக்கப்பட்டனர். மீதமிருந்த 11 போலீசார் மீதான வழக்கு சுமார் 35 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.தற்போது வழக்கின் குற்றவாளிகளான 11 போலீசாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தற்போது 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என்கவுண்டர் சம்பவம் அரங்கேறிய 2 நாட்களில் சிவசரன் மாத்தூர் முதல்வர் பதவியில் இருந்து விலகிவிட்டார்.கொல்லப்பட்ட ராஜாமான் சிங் 1977ம் ஆண்டில் இந்திரா காந்தி மற்றும் 1980ம் ஆண்டில் ஜனதா கட்சி அலைகளிலும் தனித்து நின்று வெற்றி பெற்றவர் ஆவார்.

- Advertisment -

Most Popular

மிக்ஜம் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக...

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

Recent Comments