Tuesday, October 3, 2023
Home இந்தியா தூதரக அதிகாரியுடன் தொடர்பில் இருந்த ஸ்வப்னா சுரேஷ் - தொடர்பை உறுதி செய்த செல்போன் உரையாடல்கள்

தூதரக அதிகாரியுடன் தொடர்பில் இருந்த ஸ்வப்னா சுரேஷ் – தொடர்பை உறுதி செய்த செல்போன் உரையாடல்கள்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் வெளிவந்த ஜூன் 30-ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை தூதரக அலுவலகத்தின் முதன்மை அதிகாரியான அமீரகத்தை சேர்ந்த நபரோடு ஸ்வப்னா சுரேஷ் செல்போனில் பேசி வந்துள்ளார்.

ஒரு நாளைக்கு குறைந்தது 10 முறைக்கும் மிகாமல் அவர் பேசியிருக்கிறார். இதில் ஜூலை 3ம் தேதி மட்டும் 20 முறை பேசியதாகவும், பார்சலை திறந்து தங்கத்தை கைப்பற்றிய 5ஆம் தேதி எட்டு முறை ஸ்வப்னா பேசிய ஆதாரம் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.

ஸ்வப்னா அளித்த தகவலின் படி தூதரக அலுவலகம் முதன்மை அதிகாரிக்கும் இந்த கடத்தல் சம்பவத்தில் முக்கிய பங்கு இருப்பது உறுதியாகி உள்ளதால் அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதேபோல் தூதரக அலுவலகத்தின் கன்மேன் ஜெயகோஷையும் கொச்சிக்கு வரவழைத்து விசாரணை நடத்த சுங்கத்துறை முடிவு செய்துள்ளது.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments