Friday, September 29, 2023
Home இந்தியா உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவ்வபோது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக, நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோதும், தற்போது அன்லாக்டவுன் அறிவிக்கப்படும்போதும், அதற்கு முன்பாக ஒவ்வொரு முறையும் அமித் ஷா விரிவாக ஆலோசனை மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில், தமக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, அமித் ஷா தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், தமக்கு கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததையடுத்து, மருத்துவர்களின் பரிந்துரைபடி அதனை கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டதில், தற்போது நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமித் ஷா கூறியுள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தாலும் தமது உடல்நிலை சீராகவே இருப்பதாகவும், விரைவில் தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் தமது ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதையடுத்து, அண்மையில் அவருடன் தொடர்பில் இருந்த துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments