Saturday, March 25, 2023
Home இந்தியா உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவ்வபோது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக, நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோதும், தற்போது அன்லாக்டவுன் அறிவிக்கப்படும்போதும், அதற்கு முன்பாக ஒவ்வொரு முறையும் அமித் ஷா விரிவாக ஆலோசனை மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில், தமக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, அமித் ஷா தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், தமக்கு கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததையடுத்து, மருத்துவர்களின் பரிந்துரைபடி அதனை கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டதில், தற்போது நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமித் ஷா கூறியுள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தாலும் தமது உடல்நிலை சீராகவே இருப்பதாகவும், விரைவில் தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் தமது ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதையடுத்து, அண்மையில் அவருடன் தொடர்பில் இருந்த துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments