Thursday, May 25, 2023
Home இந்தியா கோழிக்கோடு விமான விபத்து எப்படி நடந்தது?

கோழிக்கோடு விமான விபத்து எப்படி நடந்தது?

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த வெள்ளி அன்று இரவு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. கனமழையால் ஏற்பட்ட மோசமான வானிலையே விபத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது 35 அடி ஆழத்தில் விழுந்து விமானம் பல துண்டுகளாக உடைந்தன. இதில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவை மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் விமான விபத்துக்கான விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த கருப்புப் பெட்டி விபத்துக்கான காரணம் குறித்து அறிவதற்கான மிக முக்கியமான ஆதாரம் ஆகும். இதில் பதிவாகியுள்ள விஷயங்கள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன. விசாரணை ஆணையம் அளித்த தகவலின்படி, சிவில் விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் மற்றும் விமான பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் டெல்லியில் இருந்து நேற்று காலை கோழிக்கோடு சென்றடைந்தனர்.

சென்னையில் இருந்தும் ஒரு குழு சென்றுள்ளது. இதுபற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மனிதத் தவறா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்று தற்போது தெரிவிக்க இயலாது. அனைத்து விபத்துகளும் பல்வேறு காரணிகளால் ஏற்படுகின்றன. கோழிக்கோடு விமான விபத்தைப் பொறுத்தவரை முக்கியமான காரணமாக கருதப்படுவது தரையிறங்கும் போது இருந்த மோசமான வானிலையே ஆகும். 8,000 அடி நீளமுள்ள ஓடுதளமானது போயிங் 737 விமானம் தரையிறங்க போதுமானது.

எனவே விபத்திற்கான காரணம் குறித்து விமானத்தின் பயண வரலாறு மற்றும் ஏடிசி மற்றும் விமானிகள் இடையிலான தகவல்தொடர்பு ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே தெரியவரும் என்றார். இந்த சூழலில் விமானத்துறை வல்லுநர்கள் பல்வேறு விஷயங்களை ஊகங்களாக கணித்துள்ளனர். ஓடுதளத்தில் தேங்கி நின்ற நீரால் விமானத்தின் சக்கரங்களுக்கு போதிய உராய்வு கிடைக்காமல் போயிருக்கலாம். டேபிள் டாப் வகையிலான ஓடுதளத்தில் ஆப்டிகல் இல்லூசன் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். கடைசி நிமிடத்தில் ரன்வே-யை மாற்றியது விமானியின் முடிவாகவோ அல்லது ஏடிசி-யின் முடிவாகவோ இருக்கலாம்.

விமானத்தின் தரையிறங்கும் கியரில் பிரச்சினைகள் இருந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை இதுதான் பிரச்சினை என்றால் இதுபற்றி ஏடிசி யிடம் முறையாக தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படவில்லை. மோசமான வானிலை, காற்று, மோசமான ஏடிசி-யுடனான தகவல்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக டி.ஜி.சி.ஏ தலைவர் பாரத் பூஷன் தெரிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments