Wednesday, March 22, 2023
Home இலங்கை நான்காவது முறையாக இலங்கையின் பிரதமரானார் ராஜபக்சே

நான்காவது முறையாக இலங்கையின் பிரதமரானார் ராஜபக்சே

இலங்கையில் கடந்த 5 ஆம் தேதியன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி அதிக இடங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, நான்காவது முறையாக இலங்கையின் பிரதமர் பொறுப்பை ராஜபக்ச ஏற்றுள்ளார்.

கெலானியாவில் உள்ள ராஜமகா விகாரியா புத்த கோயிலில் நடைபெற்ற விழாவில் இலங்கையின் அதிபரும், தனது சகோதரருமான கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் மகிந்த ராஜபக்சே பதவியேற்றார். 1970ம் ஆண்டில் அரசியலுக்கு வந்த ராஜபக்சே அரசியலில் தனது ஐம்பதாண்டு காலத்தை நிறைவு செய்துள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 5 லட்சம் வாக்குகள் பெற்று ராஜபக்சே வெற்றி பெற்றார். இதுவரை இரண்டு முறை இலங்கையின் அதிபராகவும், மூன்று முறை பிரதமராகவும் பதவி வகித்துள்ள ராஜபக்சே தற்போது நான்காவது முறையாக பிரதமராகப் பதவி ஏற்றுள்ளார்.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments