Saturday, March 25, 2023
Home இந்தியா மூணாறு நிலச்சரிவு விபத்து - பலி எண்ணிக்கை 43ஆக உயர்வு

மூணாறு நிலச்சரிவு விபத்து – பலி எண்ணிக்கை 43ஆக உயர்வு

கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் மேலும் 17 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

இடுக்கி மாவட்டம் ராஜமலை – பெட்டிமுடி என்ற தேயிலை தோட்டத்தில் 20 வீடுகளில் வசித்த தமிழர்கள் 78 பேர், நிலச்சரிவு நிகழ்ந்து, உயிரோடு மண்ணில் புதையுண்டனர். இவர்களில் 12 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஏற்கனவே மீட்கப்பட்ட 26 சடலங்கள் இரு ராட்சத குழிகள் தோண்டி, நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இன்று மீட்கப்பட்ட 17 சடலங்களும் பிரேத பரிசோதனைக்கு பின், உடல் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொட்டும் மழையில் 3-வது நாளாக நீடித்த மீட்பு பணியில், எஞ்சிய 24 பேரின் உடல்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் தீயணைப்பு வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

பலியான தமிழர்களில் பெரும்பாலானோர் கயத்தாறு, தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் ராஜபாளையம் பகுதிகளை பூர்வீகமாக கொண்டவர்கள். இவர்கள் 3 தலைமுறைகளாக மூணாறில் வசித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments