Friday, September 29, 2023
Home இந்தியா மூணாறு நிலச்சரிவு விபத்து - பலி எண்ணிக்கை 43ஆக உயர்வு

மூணாறு நிலச்சரிவு விபத்து – பலி எண்ணிக்கை 43ஆக உயர்வு

கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் மேலும் 17 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

இடுக்கி மாவட்டம் ராஜமலை – பெட்டிமுடி என்ற தேயிலை தோட்டத்தில் 20 வீடுகளில் வசித்த தமிழர்கள் 78 பேர், நிலச்சரிவு நிகழ்ந்து, உயிரோடு மண்ணில் புதையுண்டனர். இவர்களில் 12 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஏற்கனவே மீட்கப்பட்ட 26 சடலங்கள் இரு ராட்சத குழிகள் தோண்டி, நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இன்று மீட்கப்பட்ட 17 சடலங்களும் பிரேத பரிசோதனைக்கு பின், உடல் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொட்டும் மழையில் 3-வது நாளாக நீடித்த மீட்பு பணியில், எஞ்சிய 24 பேரின் உடல்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் தீயணைப்பு வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

பலியான தமிழர்களில் பெரும்பாலானோர் கயத்தாறு, தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் ராஜபாளையம் பகுதிகளை பூர்வீகமாக கொண்டவர்கள். இவர்கள் 3 தலைமுறைகளாக மூணாறில் வசித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments