Sunday, March 26, 2023
Home வர்த்தகம் இந்திய நிறுவனம் தயாரித்த ஏகே-ரக துப்பாக்கி

இந்திய நிறுவனம் தயாரித்த ஏகே-ரக துப்பாக்கி

இந்திய தனியார் நிறுவனம் ஒன்று புதிய ரைபிள் ஒன்றை மேம்படுத்தியுள்ளது.ஏகே-47 ரக துப்பாக்கிகளை விட இந்த புதிய துப்பாக்கிகள் சிறப்பானதாக இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஏகே ரக துப்பாக்கிகளை இந்திய இராணுவம் அதிக அளவில் உபயோகித்து வருகிறது.இந்திய விரைவில் இந்தியாவில் ஏகே தயாரிப்பு தொழில்சாலை ஒன்று ஏற்படுத்தி கிட்டத்தட்ட ஆறு லட்சம் ஏகே-203 துப்பாக்கிகளை தயாரிக்க உள்ளது.

பெங்களூருவில் இயங்கும் SSS Defence என்ற நிறுவனம் 7.62×39 ரைபிள் ஒன்றை மேம்படுத்தியுள்ளது “7.62×39 SSS Defence Weapon” என அழைக்கப்படும் ரைபிளை மேம்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே மேம்படுத்தியுள்ள P-72 Rapid Engagement Combat Rifle (RECR) என்பதனை மாற்றி உருவாக்கியுள்ளது.

இது குறித்து பேசிய SSS Defence சி.இ.ஓ விவேக் கிருஷ்னன, ஒரு நவீன இராணுவத்திற்கு ஏகே-203 ஏற்புடையதாக இருக்காது எனவும் சாதாரண இன்பான்ட்ரி வீரர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.ஆனால் சிறப்பு படைகள் ஏகே-203ஐ அதிக அளவு உபயோகிக்குமா என்பது சந்தேகமே என கூறியுள்ளார்.இதற்காக நாங்கள் AK வகை ஒன்றை உருவாக்கியுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

7.62×39 ரக ரைபிள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய இந்தியா தடை பிறப்பித்துள்ளதால், எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என அவர் கூறியுள்ளார். ஏகே-203ல் இல்லாத அம்சங்கள் எங்களது துப்பாக்கியில் உள்ளது. ஏற்கனவே படையில் உள்ள துப்பாக்கிகளை அப்கிரேடு செய்துள்ளதாகவும், இதன் இறுதி முடிவுக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments