Monday, November 27, 2023
Home பொது இன்டர்போல் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி நித்தியானந்தாவின் நகைச்சுவை அறிவிப்புகள்

இன்டர்போல் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி நித்தியானந்தாவின் நகைச்சுவை அறிவிப்புகள்

கைலாசா என்றொரு நாடு எங்கே இருக்கிறதென்று எல்லோரும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அனால் அப்படி ஒரு நாடு உருவாக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. இதில் இந்திய அரசு வெட்கப்பட வேண்டியதென்னவென்றால், இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி நித்யானந்தாவால் தினசரி இணையதள வகுப்புகள் நடத்த முடிகிறது, ஒரு நாட்டையே உருவாக்கியுள்ளதாக அறிவிக்க முடிகிறது. ஆனால் இந்திய அரசால் அந்த குற்றவாளியை கைது செய்ய முடியவில்லை.

தேடப்படும் குற்றவாளி நித்யானந்தாவால் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ள சில தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கைலாச நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை நித்தியானந்தா வெளியிட்டுள்ளார். நித்தியானந்தா உருவாக்கியிருக்கும் கைலாசா தீவின் கரன்சிகள் மற்றும் ரிசர்வ் வங்கி விபரம் உள்ளிட்டவை விநாயகர் சதுர்த்தி முதல் வெளியிடப்படும் என்று நித்யானந்தா அறிவித்திருந்த நிலையில், கைலாசாவின் கரன்சிகள் எப்படி இருக்கும் ரிசர்வ் வங்கி கொள்கை எப்படி இருக்கும் என்பது குறித்த ஆர்வம் பலருக்கும் தோன்றியது.

இது குறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதன்படி 56 நாடுகளுடன் வர்த்தகம் செய்யப்படும் என்றும் இந்த 56 நாடுகளில் எதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறதோ? அதுபோன்ற நடவடிக்கை கைலாசாவில் இருக்கும் என்று குறிப்பிட்ட நித்யானந்தா ஆப்கானிஸ்தான், நேபாள், மலேசியா ஆகிய பல்வேறு நாடுகளை அவர் இந்து நாடு என்றும் குறிப்பிட்டிருந்தார். இவையெல்லாம் அடங்கியவை அகண்ட பாரதம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நாடுகளுடன் கைலாசாவுக்கு வர்த்தக தொடர்பு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கைலாசத்தின் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் என அனைத்தும் தங்கத்தில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள நித்தியானந்தா, தங்கம் என்பது ஒரு உலோக மட்டும் கிடையாது, அது புனிதம் வாய்ந்தது என்றும் கைலாசாவின் கரன்சிகள் அனைத்தும் தங்கத்திலேயே அச்சடிக்கப்படும் என்றும், குறிப்பாக இந்த கரன்சிகள் சமஸ்கிருதத்தில் சொர்ண முத்ரா என அழைக்கப்படும், தமிழில் பொற்காசு என்று ஆங்கிலத்தில் டாலர் என்றும் அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இந்த கரன்சிகள் அனைத்தும் 1 காசு, 2 காசு, 3 காசு, 4 காசு, 5 காசு என மதிப்பீடுகளை கொண்டு அச்சடிக்கப்படும், அதே நேரத்தில் ஒரு டாலரில் 1.66 கிராம் தங்கம் இருக்கும், 25 முதல் 30 வரிகளில் இந்த கரன்சிகள் அச்சடிக்கப்படும் என்றும் குறிப்பிட்ட அவர், வேதம் மற்றும் ஆகம விதிகளைப் பின்பற்றி கைலாசாவின் பொருளாதாரக் கொள்கைகள் இருக்கும் என்றும் விநாயகர் சதுர்த்தி அன்று இதெல்லாம் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisment -

Most Popular

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...

Recent Comments