Monday, October 2, 2023
Home இந்தியா இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் ஒரே நாளில் 82,507 பேருக்கு கொரோனா

இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் ஒரே நாளில் 82,507 பேருக்கு கொரோனா

டெல்லி

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் புதன்கிழமை மட்டும் ஒரேநாளில் 82,507 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 17,433 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உலக நாடுகளை ஒப்பிடுகையில் மிக மோசமாகி வருகிறது. இந்தியாவில் புதன்கிழமை ஒருநாளில் மட்டும் 82,507 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38,48,615 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 67,486.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29,67,396. தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,13,136.

நாட்டில் மகாராஷ்டிராவில்தான் மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் புதன்கிழமை மட்டும் 17,433 பே ருக்கு கொரோனா உறுதியானது. மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,25,739 ஆகும். புதன்கிழமையன்று 292 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் மரணங்கள் எண்ணிக்கை 25,195 ஆகும்.

மகாராஷ்டிராவை தொடர்ந்து ஆந்திராவில் 10,392 பேருக்கும் கர்நாடகாவில் 9,860 பேருக்கும் புதன்கிழமையன்று கொரோனா உறுதியானது. தமிழகத்தில் 5,990 பேருக்கும் உ.பி.யில் 5,682 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா மரணங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக கர்நாடகாவில் புதன்கிழமையன்று 113 பேர் உயிரிழந்தனர்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments