Tuesday, March 21, 2023
Home இந்தியா இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் ஒரே நாளில் 82,507 பேருக்கு கொரோனா

இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் ஒரே நாளில் 82,507 பேருக்கு கொரோனா

டெல்லி

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் புதன்கிழமை மட்டும் ஒரேநாளில் 82,507 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 17,433 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உலக நாடுகளை ஒப்பிடுகையில் மிக மோசமாகி வருகிறது. இந்தியாவில் புதன்கிழமை ஒருநாளில் மட்டும் 82,507 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38,48,615 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 67,486.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29,67,396. தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,13,136.

நாட்டில் மகாராஷ்டிராவில்தான் மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் புதன்கிழமை மட்டும் 17,433 பே ருக்கு கொரோனா உறுதியானது. மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,25,739 ஆகும். புதன்கிழமையன்று 292 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் மரணங்கள் எண்ணிக்கை 25,195 ஆகும்.

மகாராஷ்டிராவை தொடர்ந்து ஆந்திராவில் 10,392 பேருக்கும் கர்நாடகாவில் 9,860 பேருக்கும் புதன்கிழமையன்று கொரோனா உறுதியானது. தமிழகத்தில் 5,990 பேருக்கும் உ.பி.யில் 5,682 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா மரணங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக கர்நாடகாவில் புதன்கிழமையன்று 113 பேர் உயிரிழந்தனர்.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments