Sunday, May 28, 2023
Home இந்தியா இந்திய - சீன எல்லையில் ஆயுதங்களுடன் படைகள் குவிப்பு

இந்திய – சீன எல்லையில் ஆயுதங்களுடன் படைகள் குவிப்பு

புதுடில்லி

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள, பாங்காங் சோ ஏரி அமைந்துள்ள பகுதியில், சீனப் படைகளின் அத்துமீறல் தொடர்வதை அடுத்து, எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்திய – சீன ராணுவத்தினர், சில நுாறு மீட்டர் இடைவெளியில், துப்பாக்கி, பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நேருக்கு நேர் குவிக்கப்பட்டுள்ளதால், சண்டை மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம், லடாக்கின் கிழக்கு பகுதி யில் அத்துமீறிய சீன ராணுவத்தினர், கடுமையாக தாக்கியதில், 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்; பலர் காயமடைந்தனர். இந்த மோதலில், சீன தரப்பில் எத்தனை பேர் இறந்தனர் என்ற தகவல் இல்லை. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க, இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சீன வீரர்கள், லடாக்கின் கிழக்கு பகுதியில், மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம், எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம், 29 மற்றும் 30ம் தேதி இரவுகளில், லடாக்கின் கிழக்கு பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டு, தற்போதைய நிலையை மாற்ற முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர்.

பாங்காங் சோ ஏரியின் தெற்கு பகுதியில், சீன ராணுவத்தின் அத்துமீறலை தடுத்ததுடன், நம் நிலையை வலுப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு நிலவும் சூழலை சிதைக்க முயன்ற சீனாவின் நோக்கமும் தடுத்து நிறுத்தப்பட்டது. இரு நாட்டு ராணுவ அதிகாரிகளின் உயர்மட்ட கூட்டம் நடந்து வரும் வேளையில், கடந்த, 31ல், மீண்டும் சீன வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதையடுத்து, எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

எல்லை நிலவரம் குறித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், நேற்று முன்தினம் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம்.நரவானே, விமானப் படை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்ளும் வகையில், நம் வீரர்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலைகளில், தங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், பாங்காங் சோ ஏரியின் தெற்கு கரைப் பகுதியில், கூடுதல் படைகள் மற்றும் பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை அதிக அளவில் குவிக்கவும், கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கிழக்கு லடாக்கில் இருந்து, 310 கி.மீ., தொலைவில் உள்ள, சீனாவின் ஹோட்டான் விமானப் படை தளத்தில், தொடர்ச்சி 3ம் பக்கம்’ஜே – 20′ போர் விமானங்களை, சீனா தயார் நிலையில் வைத்துள்ளதாக, தகவல் வெளியானது.இதையடுத்து, கிழக்கு லடாக்கில், விமானப் படை ரோந்து பணிகளை தீவிரபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரு நாட்டு ராணுவ கமாண்டர் அளவிலான பேச்சு, மூன்று நாட்களாக தொடர்கிறது. ஆனாலும், அதில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை என தெரிகிறது. ஒருபுறம் அமைதி பேச்சு நடைபெறும் நிலையில், இந்திய – சீனப் படையினர், துப்பாக்கி, பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன், சில நுாறு மீட்டர் இடைவெளியில், கிழக்கு லடாக் எல்லை கட்டுப்பாடு பகுதியில், நேற்று நேருக்கு நேர் குவிக்கப்பட்டனர். அப்பகுதியில், எந்த நேரத்திலும் சண்டை மூளும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments