Wednesday, March 29, 2023
Home சினிமா தவறான தகவல் எங்களை காயப்படுத்துகிறது - எஸ்.பி.பி. சரண் வேதனை

தவறான தகவல் எங்களை காயப்படுத்துகிறது – எஸ்.பி.பி. சரண் வேதனை

மறைந்த பாடகர் எஸ்.பி.பி மருத்துவச் செலவு குறித்தும் எம்ஜிஎம் மருத்துவமனை குறித்தும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவலுக்கு எஸ்.பி.சரண் முகநூல் வாயிலாக விளக்கமளித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எம்.ஜி.எம் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி யின் மருத்துவ செலவு குறித்து சமூக வலைத்தளங்களில் சில தகவல் வந்தவண்ணம் உள்ள நிலையில், அவை தற்போது இணையத்தில் பேசுப்பொருளாக மாறியுள்ளது, அதுகுறித்து அவரது மகன் எஸ்.பி.சரண் விளக்கமளித்துள்ளார்.

அதில் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு எங்கள் குடும்பம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. அங்கு பணி புரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் தவறான தகவல் பரப்பும் அவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். ’கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’ என்று பேசியுள்ள அவர், எனது தந்தை மருத்துவச் செலவு குறித்து விரைவில் எம்.ஜி.எம் மருத்துவமனை மற்றும் நாங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்.தவறான தகவல் எங்களை காயப்படுத்துகிறது தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் எஸ்பிபி மகன் சரண் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments