Friday, September 29, 2023
Home சினிமா தவறான தகவல் எங்களை காயப்படுத்துகிறது - எஸ்.பி.பி. சரண் வேதனை

தவறான தகவல் எங்களை காயப்படுத்துகிறது – எஸ்.பி.பி. சரண் வேதனை

மறைந்த பாடகர் எஸ்.பி.பி மருத்துவச் செலவு குறித்தும் எம்ஜிஎம் மருத்துவமனை குறித்தும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவலுக்கு எஸ்.பி.சரண் முகநூல் வாயிலாக விளக்கமளித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எம்.ஜி.எம் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி யின் மருத்துவ செலவு குறித்து சமூக வலைத்தளங்களில் சில தகவல் வந்தவண்ணம் உள்ள நிலையில், அவை தற்போது இணையத்தில் பேசுப்பொருளாக மாறியுள்ளது, அதுகுறித்து அவரது மகன் எஸ்.பி.சரண் விளக்கமளித்துள்ளார்.

அதில் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு எங்கள் குடும்பம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. அங்கு பணி புரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் தவறான தகவல் பரப்பும் அவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். ’கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’ என்று பேசியுள்ள அவர், எனது தந்தை மருத்துவச் செலவு குறித்து விரைவில் எம்.ஜி.எம் மருத்துவமனை மற்றும் நாங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்.தவறான தகவல் எங்களை காயப்படுத்துகிறது தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் எஸ்பிபி மகன் சரண் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments