Tuesday, March 21, 2023
Home வர்த்தகம் ஆன்லைன் செய்திகளுக்காக ரூ.7,300 கோடி முதலீடு - கூகுள் அறிவிப்பு

ஆன்லைன் செய்திகளுக்காக ரூ.7,300 கோடி முதலீடு – கூகுள் அறிவிப்பு

சான் பிரான்சிஸ்கோ

உயர்தர ஆன்லைன் செய்தி அனுபவத்தை மக்களுக்கு வழங்க, செய்தி நிறுவனங்களில் ரூ.7,300 கோடி முதலீடு செய்ய உள்ளோம் என, கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

“கூகுள் நியூஸ் ஷோகேஸ்” என்ற சேவையை சுந்தர் பிச்சை அறிமுகப்படுத்தி பேசியதாவது:

செய்தித் துறையை ஆதரிப்பதற்காக இந்த முதலீடு செய்யப்படுகிறது. கொரோனா தாக்கத்தால் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் பதிப்பாளர்களுக்கு இதன் மூலம் உதவ முடியும். சிறிய மற்றும் நடுத்தர பதிப்பாளர்கள் தங்கள் வணிக வளர்ச்சியை துரிதப்படுத்த இது உதவும்.

தலைசிறந்த ஆசிரியர் குழுவை கொண்ட இது, வாசகர்களுக்கு செய்திகளின் புதிய பரிமானத்தையும், வெளியீட்டாளர்களுக்கு தங்கள் பார்வையாளர்களுடன் ஆழமான உறவையும் வளர்க்க உதவும். முதல் கட்டமாக ஜெர்மனி, பிரேசில், அர்ஜென்டினா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் முன்னணி பதிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். வரும் மாதங்களில் இந்தியா, பெல்ஜியம் மற்றும் பிற நாடுகளுக்கு நியூஸ் ஷோகேசை விரிவுப்படுத்த உள்ளோம்.

வீடியோ, ஆடியோ மற்றும் தினசரி செய்தி சுருக்கங்கள் போன்ற பிற அம்சங்கள் இதில் அடுத்ததாக வரும். எங்கள் நிதி முதலீடு மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும். 21ம் நூற்றாண்டில் பத்திரிகை துறையை செழித்து வளரச் செய்வதே கூகுளின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments