Thursday, December 7, 2023
Home வர்த்தகம் ஆன்லைன் செய்திகளுக்காக ரூ.7,300 கோடி முதலீடு - கூகுள் அறிவிப்பு

ஆன்லைன் செய்திகளுக்காக ரூ.7,300 கோடி முதலீடு – கூகுள் அறிவிப்பு

சான் பிரான்சிஸ்கோ

உயர்தர ஆன்லைன் செய்தி அனுபவத்தை மக்களுக்கு வழங்க, செய்தி நிறுவனங்களில் ரூ.7,300 கோடி முதலீடு செய்ய உள்ளோம் என, கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

“கூகுள் நியூஸ் ஷோகேஸ்” என்ற சேவையை சுந்தர் பிச்சை அறிமுகப்படுத்தி பேசியதாவது:

செய்தித் துறையை ஆதரிப்பதற்காக இந்த முதலீடு செய்யப்படுகிறது. கொரோனா தாக்கத்தால் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் பதிப்பாளர்களுக்கு இதன் மூலம் உதவ முடியும். சிறிய மற்றும் நடுத்தர பதிப்பாளர்கள் தங்கள் வணிக வளர்ச்சியை துரிதப்படுத்த இது உதவும்.

தலைசிறந்த ஆசிரியர் குழுவை கொண்ட இது, வாசகர்களுக்கு செய்திகளின் புதிய பரிமானத்தையும், வெளியீட்டாளர்களுக்கு தங்கள் பார்வையாளர்களுடன் ஆழமான உறவையும் வளர்க்க உதவும். முதல் கட்டமாக ஜெர்மனி, பிரேசில், அர்ஜென்டினா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் முன்னணி பதிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். வரும் மாதங்களில் இந்தியா, பெல்ஜியம் மற்றும் பிற நாடுகளுக்கு நியூஸ் ஷோகேசை விரிவுப்படுத்த உள்ளோம்.

வீடியோ, ஆடியோ மற்றும் தினசரி செய்தி சுருக்கங்கள் போன்ற பிற அம்சங்கள் இதில் அடுத்ததாக வரும். எங்கள் நிதி முதலீடு மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும். 21ம் நூற்றாண்டில் பத்திரிகை துறையை செழித்து வளரச் செய்வதே கூகுளின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

- Advertisment -

Most Popular

மிக்ஜம் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக...

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

Recent Comments