Monday, October 2, 2023
Home இந்தியா உ.பி. இளம் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் - காவல்துறையினர் மிரட்டுவதாக குடும்பத்தினர் புகார்

உ.பி. இளம் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் – காவல்துறையினர் மிரட்டுவதாக குடும்பத்தினர் புகார்

உத்தரபிரதேசத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க செய்தியாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், தடைகளை தாண்டி வயல்வெளி வழியே ஓடி வந்து செய்தியாளர்களை சந்தித்தான். அப்போது தாங்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தங்களிடம் இருந்த செல்போனையும் காவல்துறையினர் பறித்து கொண்டதாகவும் கூறினான். அப்போது திடீரென காவல்துறையினர் வந்ததால் சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்றான். அப்போது காவல் துறையினரை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை முடியும் வரையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்க செய்தியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments