Wednesday, March 29, 2023
Home தமிழகம் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை - வேகமாக அதிகரித்து வரும் காய்கறி விலை

கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை – வேகமாக அதிகரித்து வரும் காய்கறி விலை

கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 5 ஆம் தேதி மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை 4 மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் 28 ஆம் தேதி கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது. மொத்த மற்றும் சில்லறை என சுமார் 2,000 கடைகளை கொண்ட கோயம்பேடு சந்தையில், 197 மொத்த கடைகளை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டது.

அதோடு, நள்ளிரவு 1 மணி முதல் காலை 9 மணி வரை விற்பனை செய்ய கடை உரிமையாளர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.

கோயம்பேடு சந்தைக்கு உதகை, பெங்களூரில் இருந்து கேரட் கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரம் ஒருநாளைக்கு சராசரியாக 80 டன் இருந்த நிலையில், தற்போது தொடர் மழை காரணமாக 40 டன்னாக குறைந்துள்ளது.

இதனால் கடந்த வாரம் கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட், தற்போது 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், பெரிய வெங்காயம் 40 ரூபாயில் இருந்து 55 ரூபாயாகவும், பச்சை மிளகாய் கிலோ 30-இல் இருந்து 60 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. பீன்ஸ், முட்டை கோஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு 30 முதல் 35 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

அதேசமயம், தக்காளி, அவரைக்காய், வெண்டை, கத்திரிக்காய் போன்றவற்றின் விலை சற்று குறைந்துள்ளது. தக்காளி 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் கிலோ 25 ரூபாய்க்கும், அவரை 25 ரூபாய்க்கும், கத்தரிக்காய் கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கோயம்பேடு சந்தை முழுமையாக திறக்கப்பட்டால் மட்டுமே, காய்கறி விலை கட்டுக்குள் வரும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments