Tuesday, March 21, 2023
Home வர்த்தகம் சென்னையில் இன்று தங்கம் விலை பெரும் சரிவு

சென்னையில் இன்று தங்கம் விலை பெரும் சரிவு

புரட்டாசி மாதத்தில் பொதுவாக திருமணங்கள் நடப்பதில்லை. ஐப்பசி மாதத்தில் தான் அடுத்து முகூர்த்தங்கள் இருக்கும். அப்போது திருமணங்கள் அதிக அளவில் நடைபெறும். இந்நிலையில் பல மாதங்களாக லாக்டவுனால் தள்ளிப்போன பல திருமணங்கள் இப்போது தான் நடைபெற உள்ளன.

இந்த சூழலில் தங்க நகைகள் விலை சரசரவென குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.384 குறைந்தது. இதனால் சவரன் ரூ.38 ஆயிரத்து 400க்கு வந்துள்ளது. வரும் வாரங்களில் தங்கம் விலை இன்னும் குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தங்கம் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கொரோனா காரணமாக தங்கம் விலை வெறும் ஆறு மாதத்தில் 8 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்தது. மார்ச் மாதத்தில் 32 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதம் 43 ஆயிரம் என்கிற அளவிற்கு உயர்ந்தது

தங்கம் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கொரோனா காரணமாக தங்கம் விலை வெறும் ஆறு மாதத்தில் 8 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்தது. மார்ச் மாதத்தில் 32 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதம் 43 ஆயிரம் என்கிற அளவிற்கு உயர்ந்தது.

உச்சபட்சமாக கடந்த செப்டம்பர் 28ம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை 37920க்கு விற்பனை ஆனது. ஆனால் அடுத்த நாளே சுமார் 600 ரூபாய் அளவிற்கு உயர்ந்து 38500ஐ தொட்டது. அதன்பிறகு கொஞ்சம் ஏறுவது பின்னர் இறங்குவதுமாக உள்ளது, 300 முதல் 400 ரூபாய் வரை ஏற்ற இறக்கங்களை தங்கம் தினசரி சந்தித்து வருகிறது.

சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை நேற்று 4,850 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் விலை 38 ஆயிரத்து 800 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் இன்று ஒரு சவரனுக்கு ரூ.384 சரிந்து தற்போது ரூ.38416க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை 48 ரூபாய் சரிந்து 4802 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் விலை சரிவால் நகை வாங்குவோர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதனிடையே தங்கத்தை போல் வெள்ளியின் விலையும் சரிவை சந்தித்துள்ளது. வெள்ளியின் விலை கிலோவுக்கு நேற்று 64 ஆயிரத்து 700 ரூபாயாக விற்பனையானது. ஆனால் இன்று 600 ரூபாய் சரிந்து 64 ஆயிரத்து 100 ரூபாயாக விற்பனையாகிறது.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments