தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். 35 வயதாகும் இவர் தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே கொரோனா ஊடரங்கு சமயத்தில் காஜல் அகர்வாலுக்குக்கும் தொழிலதிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த கௌதம் கிட்சு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக காஜல் அகர்வால் தற்போது அறிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், வரும் 30 ஆம் தேதி கௌதல் கிட்சுலு என்பவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளேன்.
இந்த திருமணம் மும்பையில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடைபெறவுள்ளது.உங்களின் அன்புக்கும் ஆசிக்கும் நன்றி. எப்போதும்போல தொடர்ந்து படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பேன் என பதிவிட்டுள்ளார்.