அ.தி.மு.கவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு நாளை வெளியாகும் நிலையில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை சென்னையில் அவரது இல்லத்தில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, எஸ்.பி வேலுமணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார்கள்.
கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் காலை முதலே துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்திவருகிறார். நாளை கட்சியின் 11 பேர் வழிகாட்டுதல்குழு குறித்த அறிவிப்பும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மறுபுறம் முதல்வர் பழனிசாமியும் தனது ஆதரவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.