Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் 8 ஆம் தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்

ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் 8 ஆம் தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்

தெற்கு ஆந்திர கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில், உள் மாவட்டங்களில் மிதமான மழையும், அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சேலம் நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 9 ஆம் தேதி அந்தமான் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆழ்கடல்ப் பகுதியில் இருக்கும் மீனவர்கள் 8 ஆம் தேதிக்குள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments