Saturday, March 25, 2023
Home உலகம் அமெரிக்க அதிபர் தேர்தல் - இணைய வழி விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் மறுப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் – இணைய வழி விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் மறுப்பு

டிரம்புக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், வரும் 15 ஆம் தேதி அமெரிக்காவின் மியாமி நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த விவாதத்தை இணைய வழியே நடத்த வேண்டியுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இணைய வழி விவாதத்துக்கு டிரம்ப் மறுப்புத் தெரிவித்துள்ளதால், வரும் வாரங்களில் நடைபெற வேண்டிய அதிபர் வேட்பாளர்களுக்கிடையேயான விவாதம் எங்கு, எப்படி நடைபெறும் என்ற குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. டிரம்புக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்படுவதற்கு முன்பு, அதாவது கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெற்ற விவாதம் அவமதிப்புகள் மற்றும் குறுக்கீடுகள் நிறைந்த ஒன்றாக பார்க்கப்பட்டது.

வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி, ஜோ பைடன் தேசிய அளவில் ஒற்றை இலக்க வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதாக தெரியவந்துள்ளது. எனினும், தேர்தல் முடிவானது, இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் முக்கிய மாகாணங்களின் இறுதி வாக்குப்பதிவை பொறுத்தே அமையும்.

தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை சுமார் 60 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். முன்னதாக, இந்த விவாதம் குறித்து தொலைபேசி வாயிலாக அமெரிக்க செய்தித் தொலைக்காட்சியான ஃபாக்ஸ் பிசினஸ் சேனலிடம் பேசிய டிரம்ப், “ஒரு கணினிக்கு பின்னால் உட்கார்ந்து கொண்டு நடைபெறும் மெய்நிகர் விவாதத்தில் பங்கேற்று என் நேரத்தை வீணடிக்க போவதில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், “டிரம்ப் தனது முடிவுகளை ஒவ்வொரு நொடிக்கும் மாற்றுகிறார்” என்று கூறினார்.

இந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி வழக்கமான முறைப்படி, மியாமியில் விவாதத்தை நடத்துவதற்கு ஜோ பைடனின் பிரசார குழு விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments